Tuesday, January 18, 2011

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 3




















அல்லும் பகலும் காதொற்றி பேசுபவர்
செல்போன் காதலர் ஆவர்.

======================

அள்ளித் தீராத சமுத்திரம் போல்
சொல்லித் தீராதது காதல்.

======================

கவிதையில் காதலைப் பகிர்ந்த தருணத்தில்
புவியில் யாவும் அழகாகும்.

======================

படம்: இணையத்தில் இருந்து (http://thesituationist.wordpress.com/2008/02/10/crazy-little-thing-called-love-2/) - நன்றி.


Thursday, January 13, 2011

சர்க்கரைப் பொங்கல்
















செவுரு
முச்சூடும் சுண்ணாம்பு பூசி
வாசத் தொரவெல்லாம் சாணி வளிச்சு
பெரிய பாத்திரங்கள வெளக்கி
ஊரே பொங்கலை எதிர் பாத்துட்டு இருக்க...
"இந்த வருசமும் மகன் வரல..
லெட்டர் போட்டிருக்கான்.. "
அப்படின்னு பக்கத்துக்கு வூட்டு லெட்சுமியிடம்
பொலம்பறாங்க கண்ணம்மா பாட்டி..
உள்ளிருந்து கண்ணம்மா தாத்தா
"இந்த வருசமும்
வெள்ளைப் பொங்கலே போதும்
சர்க்கரைப் பொங்கல் வேண்டாம்"
என்று கத்திக் கொண்டிருக்கிறார்..

********************************

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..