Monday, July 13, 2009

பெயர்

நான்
எழுதிய
எல்லா கவிதைகளுக்கும்
பெயரிட்டு விட்டேன்
உன்னைத் தவிர !

Wednesday, June 17, 2009

அம்மா

கூரை மீது
வைத்த சோற்றுக்கு
வந்தமர்ந்த
காகங்களில்
எது என் அம்மாவென
எப்படி
கண்டுபிடிப்பேன் ?