இப்படிக்கு இளங்கோ
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
Friday, March 20, 2009
ஓரிடம்
எங்கோ ஓரிடத்தில்
சந்திக்க
நேரும் போதெல்லாம்
கேட்கத்தான் தோன்றுகிறது
அகதியாய்
வந்த நாம்
எப்பொழுது திரும்புவோம்
என
நேற்று வந்திறங்கிய
கர்ப்பிணி பெண்ணை
பார்த்த பின்
தொண்டைக்குள்ளேயே
தங்கி விட்டது
Wednesday, March 18, 2009
வரிசை
அத்தனையும்
நகர்ந்து கொண்டிருந்தன
ஒரே வரிசையில்
காலுக்கு அடியில்
சிலது மிதிபட்டன
கையில் நசுக்கி
சிலது கொல்லப்பட்டன
உயிருள்ள
எவற்றுக்கும்
திரும்பி பார்க்க
நேரமில்லை
அத்தனையும்
நகர்ந்து
கொண்டிருந்தன
ஒரே
வரிசையில் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)