Wednesday, January 27, 2010

கூண்டுக் கிளி

கரும் பச்சை அடர்ந்த
மதில்சுவரின் கடைசியில்
கூண்டுக் கிளியோடிருந்தார் ஜோஸ்யர்...
வெளிவந்த கிளி
எனக்கு எடுத்த சீட்டில்
கண்ணனும் ராதையும்...

ஜோஸ்யரின் பேச்சில்
நானும் கிளியும்
மயங்கி இருந்தோம்..

கேட்டுவிட்டு நடக்கலானோம்
கிளி உள்ளேயும்
நான் வெளியேயும்
கண்ணன்களையும், ராதைகளையும் தேடி...

நமக்கு கூட வாய்க்க கூடும்..
கூண்டுக் கிளிக்கு ?

2 comments: