இவன் வயிற்றில் இருந்தபோது
ஒருநாள்
நாட்டு ஓடு போட்ட கூரையின் மேல்
சடசடவென கல்மாரி விழுந்தது...
நடந்து பழகியவன்
ஒருநாள் கல் தடுக்கி
விழுந்த காயத்திற்கு
நான்தான் மருந்து போட்டு விட்டேன்...
கல்லைத் தூக்கி வீசியதில்
பக்கத்துக்கு வீட்டு பையனின்
மண்டை உடைந்து ரத்தம் வழிந்ததில்
பையனின் அம்மாவுடன்
ஜென்மப் பகை வந்தது...
தள்ளாத வயதில்
முதியோர் இல்லத்தில்
தவிக்க விட்டுப் போனவன்
அவன்
அவனே
ஒரு பாறாங் கல்லோ
என்று இப்பொழுது நினைக்கிறேன்....
ஒருநாள்
நாட்டு ஓடு போட்ட கூரையின் மேல்
சடசடவென கல்மாரி விழுந்தது...
நடந்து பழகியவன்
ஒருநாள் கல் தடுக்கி
விழுந்த காயத்திற்கு
நான்தான் மருந்து போட்டு விட்டேன்...
கல்லைத் தூக்கி வீசியதில்
பக்கத்துக்கு வீட்டு பையனின்
மண்டை உடைந்து ரத்தம் வழிந்ததில்
பையனின் அம்மாவுடன்
ஜென்மப் பகை வந்தது...
தள்ளாத வயதில்
முதியோர் இல்லத்தில்
தவிக்க விட்டுப் போனவன்
அவன்
அவனே
ஒரு பாறாங் கல்லோ
என்று இப்பொழுது நினைக்கிறேன்....