Monday, August 1, 2011

புதிய இடம்: வால்பாறை

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு நண்பர்கள் சென்றிருந்தோம். மலை என்றாலே பனி, சில்லென்ற காற்று, பசுமை, நெடிது உயர்ந்த மரங்கள், எப்பொழுதும் பூ பூவாய் தூறும் மழை என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நாங்கள் செல்லும் வழியில் நிறைய குரங்குகளும், ஒரே ஒரு வரை ஆடும் பார்க்க நேர்ந்தது. போகும் வழியெல்லாம் தேயிலைத் தோட்டங்கள்.

மனிதன் மலை வளங்களைச் சுரண்டிக் கொண்டு இருந்தாலும், அவைகள் இன்னும் கொஞ்சம் தேக்கி வைத்திருக்கின்றன. அவசர கால உலகத்தில், இது போன்ற இடங்களே நம்மை ஒரு மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கின்றன.

அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்கள்;














Thursday, July 28, 2011

எல்லோருக்கும் மழை














எல்லோருக்கும்
பெய்கிறது மழை

'காலையில் இருந்து இப்படித்தான்
கொட்டிட்டு கெடக்குது
ஒரு வேல செய்ய முடியல'

'எப்பதான்
நின்னு தொலையுமோ'

'இன்னைக்கு ஒண்ணும்
பண்ண முடியாது'

'மழ நின்னாதான்
பொழப்பு ஓடும்'

என்பவர்களுக்கும் சேர்ந்தே
பெய்து கொண்டிருக்கிறது மழை.


படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.