Friday, June 10, 2011

எனது டைரியிலிருந்து - 3

தோற்ற மயக்கம்
எஸ்.ஆர். இராஜாராம் (ஆனந்த விகடன்)

துல்லிய நீர்ப்பரப்பில்
துறவிபோல் வந்தமர்ந்து
மெல்லிய தன் உடலை
மேற்பரப்பில் பிரதியாக்கி
தண்ணீரில் தவம் செய்யும்..
பார்ப்பதற்கு பரவசம்தான்
மீனுக்குத்தானே தெரியும்
கொக்கின் குரூரம்.

============================================

துபாய்
இ. இசாக் (ஆனந்த விகடன்)

கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக்
காணப் போகிற மகிழ்ச்சி
எனக்குள்.
ரசித்து ரசித்து
வாங்கிய பொம்மைகளோடு
காத்திருக்கிறேன் நெடுநேரமாக.
வீடு நுழைந்த முகம் கண்டு
தொட்டுக் கொஞ்சி மகிழ
நெருங்கையில்
'யாரும்மா.. இவங்க?' என்கிறாள்
மழலை மொழியில்
என் மகள்.

============================================

வதை
ஜி. விஜயலெட்சுமி (ஆனந்த விகடன்)

திருவிழாக் கூட்டத்தில்
குழந்தையைத் தொலைத்துவிட்டு
தவிக்கையில்..
சின்ன வயதில்
வீட்டுத் தொழுவத்தில்
தெருநாய் ஈன்ற குட்டிகளை
கோணிப்பையில் திணித்து
ஊருக்கு வெளியே
கள்ளிக்காட்டில்
கொண்டுபோய் விட்டதெல்லாம்
நினைவுக்கு வருகிறது.

============================================

கவனம்
சே. சதாசிவம் (ஆனந்த விகடன்)

நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமாண மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி.

============================================




Wednesday, June 8, 2011

என் கேமராவின் சிறைக்குள்..

நாங்க எப்பவுமே அழகுதான்( இடம்: மேட்டுப்பாளையம்)


எங்களப் பிடிச்சு கூண்டில் அடைச்சு ரசிக்கிற உலகம் (இடம்: மேட்டுப்பாளையம்)


நாங்க இருக்கிற இடம் எப்பவும் இப்படி பசுமையா இருக்கும் (இடம்: ஏற்காடு)


நாங்களும் பசுமைக்கு காரணம்( இடம்: ஏற்காடு)



எவ்வ்ளோ உசரம் !! (இடம்: அவினாசி பெரிய கோவில்)


வருசம் ஒரு தடவதான் இப்படி. (இடம்: அவினாசி தெப்ப தேர் திருவிழா)


நாங்க எப்பவும் இப்படித்தான், சிரிச்சுக்கிட்டே இருப்போம்.


படங்கள் அனைத்தும் என் செல்போனில் எடுத்தவை.