Sunday, April 10, 2011

மக்களால் மக்களுக்கு

பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருந்தது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி..

ஒரு நாள்
சாரை சாரையாக வந்தார்கள்
வெள்ளை ஆடையில் நல்லவர்கள் ஆனார்கள்
உங்கள் வீட்டுப் பிள்ளை
உங்கள் காலடியில் கிடப்பேன்
என்றெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்டார்கள்

வழக்கம் போல்
ஜெயிக்கவும் தோற்கவும் ஆனார்கள்

வெற்றி பெற்றவர்கள்
அவரவர் முடிந்ததை
அவரவருக்குத் தேவையான வரை
கக்கத்தில் கட்டிக் கொண்டார்கள்..

நேரமிருக்கும்போது மக்களைச் சந்தித்து
குறை கேட்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்
அல்லது சந்திப்பையே தவிர்த்தார்கள்

தேர்தல் நாள் அறிவித்தவுடன்
திரும்பவும் அந்த நாள் வந்தது
இந்த தடவை குத்தகை
யார் கைக்கு போகுமென்பது
எண்ணிக்கை முடிந்த பிறகு தெரியும்...


சொல்ல மறந்து விட்டேன்
பாடப் புத்தகத்தில்
இப்படித்தான் இருக்கிறது
மக்களால் மக்களுக்கு மக்களாட்சி....


Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே



அரசியல்வாதிகளின் ஊழலைத் தடுக்க திரு. அன்னா ஹசாரே அவர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஊழல் பெருகி வரும் இந்தச் சூழலில் இவர்களைப் போன்றோரின் போராட்டங்கள் நமக்கு நிச்சயம் தேவை.

காந்தியவாதியான இவர், "அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

அவருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்போம்.

நன்றி: தினமலர்
செய்திகள் :
ஊழலுக்கு எதிராக களம் இறங்கிய காந்தியவாதி : நாட்டுக்காக உயிர் விட தயார் என்கிறார்
ஊழலை எதிர்க்கும் காந்தியவாதி உண்ணாவிரதத்திற்கு அபார ஆதரவு