ஜென்னில் ஒரு கோப்பை தேநீர் அருந்துவது என்பது ஒரு தவம் போல். ஒரு கப் தேநீரை கையில் எடுத்துக் கொள்வது முதல், துளித் துளியாக ரசித்து விழுங்கி, காலி கோப்பையை கீழே வைப்பது வரை எப்படிச் செய்கிறீர்கள் என்பதை ஜென் குருக்கள் கவனிப்பார்கள். ஒரு கோப்பை தேநீரை இவ்வளவு ரசித்துக் குடிக்க முடிந்தால், இந்த வாழ்க்கையை அவர்கள் எவ்வளவு ரசிப்பார்கள்.

கிராமங்களில் இன்றும் 'காப்பி தண்ணி குடிச்சிட்டு போறது..' என்று சொல்வார்கள். நண்பன் ஒருவனுக்கு காலை எழுந்தவுடன் தேநீர் கண்டிப்பாக வேண்டும். எங்கேனும் இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் கடைகளில் ஆர்டர் பண்ணுவது தேநீர் தான்.
இப்படி தேநீர் பல இடங்களில் நம் கூடவே இருந்தாலும், ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தக் கவிதை ஒரு கணம் பிரமிக்க வைத்தது.
தேநீர் வேளை
காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.
சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.
பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.
எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!
விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)
நன்றி: ஆனந்த விகடன், மேலே உள்ள படம் இணையத்தில் இருந்து.

கிராமங்களில் இன்றும் 'காப்பி தண்ணி குடிச்சிட்டு போறது..' என்று சொல்வார்கள். நண்பன் ஒருவனுக்கு காலை எழுந்தவுடன் தேநீர் கண்டிப்பாக வேண்டும். எங்கேனும் இரு நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் கடைகளில் ஆர்டர் பண்ணுவது தேநீர் தான்.
இப்படி தேநீர் பல இடங்களில் நம் கூடவே இருந்தாலும், ஆனந்த விகடனில் வெளிவந்த இந்தக் கவிதை ஒரு கணம் பிரமிக்க வைத்தது.
தேநீர் வேளை
காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.
சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.
பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.
எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!
விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)
நன்றி: ஆனந்த விகடன், மேலே உள்ள படம் இணையத்தில் இருந்து.