Wednesday, November 17, 2010

பெய்யும் மழை




















எல்லோருக்கும் எல்லாமும்
கிடைத்து விடாதாகையால்
சிநேகமாய்
ஆதரவாய்
மோனத் தவமாய்
உயிர்த் துளிகளாய்ப்
பெய்து கொண்டிருக்கிறது மழை...

பெய்யும் மழையை
எதிர்த்துக்கொண்டு
நீள்சாலைகளில் விரைகிறது
என் வாகனம்
எந்தச் சலனமுமின்றி..


படம் தந்த தளம் : http://www.artiststranger.com


சத்துணவுக்காக ஒன்றரை கி.மீ


இன்றைய தின மலரில் "சத்துணவுக்காக" ஒன்றரை கி.மீ., தட்டுடன் நடந்து செல்லும் மாணவச் செல்வங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அந்தச் செய்தியின் சுட்டி:
சத்துணவுக்காக 3 கி.மீ., தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்

ஒரு மந்திரி வருகிறார் என்றால் புதுச் சாலைகள் ஓரிரு நாட்களில் போட முடிந்த இவர்களால், இந்தக் குழந்தைகளுக்கு ஒரு கட்டிடம் அமைத்து தர இயலவில்லை. சரி இந்தக் குழந்தைகளுக்கு செலவு செய்ய நிதி இல்லை போலும்.

ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில் - "கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? " என்று கூறியது முற்றிலும் உண்மை.

நன்றி : தினமலர் - புகைப்படம் மற்றும் செய்தி.