Thursday, October 28, 2010

தலைவர்கள் வருகிறார்கள்..















தேர்தலுக்கும்
இடைத் தேர்தலுக்கும்
வெள்ளம் வந்தாலும்
தீ வைத்துக் கொண்டாலும்
கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும்
உதவிகள் வழங்கவும்
கடைகள் திறப்பிற்கும்
எங்கள் தலைவர்கள்
அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள்
நோயுற்றிருக்கும் நோயாளியை
பார்க்க வருவது போன்றும்
மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !


{ இது ஒரு மீள் பதிந்த பதிவு :) }

நன்றி: புகைப்படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.

--------------------------------------------------

Wednesday, October 27, 2010

நாடும், மக்களும் என்ன செய்வர்..

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி சில எண்ணங்கள். இவர்கள் இப்படித்தான், அவர்கள் அப்படித்தான் என நாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறோம். அண்டை வீட்டுக்காரர்கள் முதல் அடுத்த நாட்டுக்காரன் வரை நமக்குள்ளாகவே ஒரு கற்பிதம்.




இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னந் தனியாக ஒரு வெளிநாட்டில் போய் நான் இறங்கியபொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இரண்டு பேருடன் நான் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். கூட இருந்த ஒரு பிரெஞ்ச் நண்பனும், ஜெர்மன் தோழியும் சகலமும் சொல்லிக் கொடுத்தார்கள். அடுப்பு பற்ற வைப்பது முதல் வீட்டைப் பூட்டுவது வரை ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்தார்கள். சரியாக சொல்லப் போனால் மொழியோ, நாடோ அங்கே பிரச்சனையாக இல்லை. சக மனிதர்கள் மேல் உள்ள அக்கறை தான், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கிறது.

ஒவ்வொரு நாட்டுக்கும் வித்தியாசமான பண்பாடுகள். இங்கே இருப்பதை அங்கேயும், அங்கே இருப்பதை இங்கேயும் தேடினால் எப்படிக் கிடைக்கும்?. நாடுகளின் அரசியல் தலைவர்கள் வேண்டுமானால் ஒரு சில நோக்கங்களோடு இருக்கலாம், ஆனால் நாட்டில் உள்ள மனிதர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல.

கணியன் பூங்குன்றனாரின் பின்வரும் வரிகள் சொல்ல வருவதும் இதைத்தானோ?

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோடு அன்ன
சாதலும் புதுவதன்றே
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று இலமே
மின்னொடு வானந் தண்துளி தலையியானது
கல்பொருதிரங்கு மல்லற் பேர் யாற்று
நீர்வழிப் படூம் புணை போல் ஆருயிர்
முறைவழிப் படூம் என்பது
திறவோர் காட்சியிற் திறந்தனம் ஆகலின்
மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

(பாடலில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்)


ஒரு போட்டி நடக்கும்போது தன் நாடு வெற்றி பெற வேண்டும் என நினைப்பது இயற்கை. ஆனால், எதிர் அணி வெற்றி பெறவே கூடாது எனக் கோபம் கொள்ளுவது எதற்கு?.

சில பேர் செய்யும் தவறுகளுக்கு அந்த நாடும், மக்களும் என்ன செய்வர் ?.

குறிப்பு: பூமி புகைப்படம் இணையத்தில் இருந்து. நன்றி.