வானுயர் கட்டிடங்களின் மேல் எங்கிருந்தோ வந்த பொன்வண்டு ஒன்று பறந்து கொண்டிருக்கிறது.. அது அறிந்திருக்க வாய்ப்பில்லை அதற்கான உணவு இந்நகரத்தில் இல்லையென...
படம்: http://www.orangecounty.in/lifescapes/once-upon-a-bug/ தளத்தில்இருந்து. நன்றி
அன்று சிறு வயதில், பொன்வண்டுகளை தீப்பெட்டிக்குள் பத்திரமாக சேமித்து வைக்கும் பொழுது இருந்த மகிழ்ச்சி, இன்று சுதந்திரமாக இப்படத்தில் பார்க்கும் பொழுதும் அதே மகிழ்ச்சி....
பொன்வண்டு, வெல்வெட்டுபூச்சி, பால்செடியில் இருக்கும் ராட்சத வெட்டுக்கிளி இவைகளைப் பார்த்தே பலவருடங்கள் ஆடி விட்டன.. அத விடுங்க பாஸ், வெள்ளை நிற பட்டாம்பூச்சி, கண்வரைந்த ராட்சத பட்டாம்பூச்சி, இவைகளை எல்லாம் இப்போது காண முடியவில்லை..
மனிதர்கள் எல்லாம் பாவிகளே.. பூமி என்பது நாம் வாழ்வதற்கான இடம்தான்.. ஆனால் இங்கு நாம் மட்டுமே இல்லை என்பதையும் உணர வேண்டும்..
முதலில் எல்லாம் வெட்டுக்கிளிகளை மர தீப்பெட்டியில் அடைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து வந்து ஜோசியம் பார்ப்போம்.. பெரிய வெட்டுக்கிளி கொண்டு வருபவன் தான் எங்களில் வீரன்.... அவர்கள் எப்போதும் பெரிய சிகரெட் பெட்டிகளில் தான் அந்த பெரிய வெட்டுக்கிளிகளை கொண்டு வருவர்.. வெளியில் வந்தால் சதையைக் கிழித்து ரத்தம் குடித்து விடும் என்று புரளி வேறு நிலவியது..(பெட்டியில் அடைத்தாலும் அவை தின்ன புல் நுனிகளைக் கிள்ளி உள்ளே போட்டிருப்போம்).. அவைகளுக்கு அது வலிக்கும் துன்பப் படும் என்று எங்களுக்கு யாருமே சொல்லித் தரவில்லை.. அவைகள் கொடுத்த சாபம் தான் என்னவோ, நமது அடுத்த தலை முறையினருக்கு அதை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கப் போவது இல்லை...
ஆகா, சிறுவயதில் பார்த்தது. அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு போய்விட்டது பொன்வண்டு என்னை அந்தக் காலத்திற்கு. திரிந்து அலைந்து பொன்வண்டு பிடித்து, தீப்பெட்டிகுள்ளே திணித்து அடைத்து , பள்ளிப் பைக்குள் பத்திரமாய் வைத்த பொன்வண்டு எப்படி பறந்ததென தெரியவில்லை இன்றுவரை. ஓகோ உங்கள் நகரத்து மாடிகளில் தான் தேடிக் கொண்டிருக்கிறதோ என்னை ?
அருமை நண்பா.. நாமும் தான் அந்த பொன்வண்டு மாதிரி இருக்கிறோம் தனக்கான இடம் எதுவென்று தெரியாமல்.
பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...
பள்ளியில் 'செவ்வாழை' கதை பாடமாக இருந்தது. ஓர் ஏழையின் வீட்டில் வளரும் செவ்வாழை குலை தள்ளி இருக்கும். அவனின் குழந்தைகள், மனைவி என அந்தக் குலை பெரிதாகி எப்பொழுது பழம் பழுக்கும், நாம் தின்னலாம் எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர், தன் வீட்டு விசேசத்துக்கு, அந்த வாழையை வெட்டிக் கொடுக்கச் சொல்ல, வேறு வழியில்லாமல் வெட்டித் தந்து விடுகிறான் அந்த ஏழை. குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து அழுவார்கள். அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி. ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது. குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்...
ஓஹோ?
ReplyDeleteநகரங்களின் நிலைப்பாட்டை பொன் வண்டு மூலம் அழகாக சொல்லியிருக்கிறிர்கள்
ReplyDeleteஉங்களுக்கு அவார்ட் தந்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள் நன்றி
ReplyDeletehttp://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html#
இது தான் பொன்வண்டா பாஸ்?! இப்போ தான் பார்க்கிறேன்
ReplyDeleteஅன்று சிறு வயதில், பொன்வண்டுகளை தீப்பெட்டிக்குள் பத்திரமாக சேமித்து வைக்கும் பொழுது இருந்த மகிழ்ச்சி, இன்று சுதந்திரமாக இப்படத்தில் பார்க்கும் பொழுதும் அதே மகிழ்ச்சி....
ReplyDeleteஅதுக்கு என்ன உணவு இளங்கோ? ;-) ;-)
ReplyDeleteபொன்வண்டு, வெல்வெட்டுபூச்சி, பால்செடியில் இருக்கும் ராட்சத வெட்டுக்கிளி இவைகளைப் பார்த்தே பலவருடங்கள் ஆடி விட்டன.. அத விடுங்க பாஸ், வெள்ளை நிற பட்டாம்பூச்சி, கண்வரைந்த ராட்சத பட்டாம்பூச்சி, இவைகளை எல்லாம் இப்போது காண முடியவில்லை..
ReplyDeleteமனிதர்கள் எல்லாம் பாவிகளே.. பூமி என்பது நாம் வாழ்வதற்கான இடம்தான்.. ஆனால் இங்கு நாம் மட்டுமே இல்லை என்பதையும் உணர வேண்டும்..
முதலில் எல்லாம் வெட்டுக்கிளிகளை மர தீப்பெட்டியில் அடைத்து வைத்து பள்ளிக்கு எடுத்து வந்து ஜோசியம் பார்ப்போம்.. பெரிய வெட்டுக்கிளி கொண்டு வருபவன் தான் எங்களில் வீரன்.... அவர்கள் எப்போதும் பெரிய சிகரெட் பெட்டிகளில் தான் அந்த பெரிய வெட்டுக்கிளிகளை கொண்டு வருவர்.. வெளியில் வந்தால் சதையைக் கிழித்து ரத்தம் குடித்து விடும் என்று புரளி வேறு நிலவியது..(பெட்டியில் அடைத்தாலும் அவை தின்ன புல் நுனிகளைக் கிள்ளி உள்ளே போட்டிருப்போம்).. அவைகளுக்கு அது வலிக்கும் துன்பப் படும் என்று எங்களுக்கு யாருமே சொல்லித் தரவில்லை.. அவைகள் கொடுத்த சாபம் தான் என்னவோ, நமது அடுத்த தலை முறையினருக்கு அதை நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கப் போவது இல்லை...
ReplyDeleteபடித்த படிப்பிற்கு வேலை தேடும் பல இளைஞர்களின் நிலையும் இது தான்...
ReplyDelete@ஷஹி
ReplyDeleteநன்றிங்க ஷஹி
@roshaniee
ReplyDeleteஎல்லோருக்கும் உண்டான உணவை நகரங்கள் தர இயலுவதில்லை.
நன்றிங்க நண்பரே.
@எம் அப்துல் காதர்
ReplyDeleteநன்றி நண்பரே, விருது தந்தமைக்கு.
@Balaji saravana
ReplyDeleteஆமாம் நண்பரே, அந்தக் காலத்தில் கிராமத்தில் நிறையக் காணலாம். இப்பொழுது அல்ல. :)
@பத்மநாபன்
ReplyDeleteநன்றிங்க அண்ணா.
@RVS
ReplyDeleteஎனக்கு தெரிந்து கொஞ்சூண்டு புல், பசுந் தழைகள் தான் அண்ணா. அது தான் நம்ம சிட்டில கெடைக்காதே :)
நன்றிங்க.
@சாமக்கோடங்கி
ReplyDeleteஆஹா, நான் ஒரு கவிதை எழுதி உங்களை எல்லாம் பின்னோக்கி போக வெச்சிட்டேனே :)
ஒன்று ரெண்டை நாம் பிடித்து விளையாடுவதால் அந்த இனம் முற்றாக அழிய வாய்ப்பில்லை. வருந்த வேண்டாம் பிரகாஷ், அது அந்த வயதுக்கே உரியது.
நன்றிங்க பிரகாஷ்.
@வெறும்பய
ReplyDeleteவண்டுகள் மட்டுமில்லை, இம் மாபெரும் நகரங்களில் ஊரை விட்டு வந்தவர்கள், வேலை தேடுபவர்கள் என எல்லோரும் பசியாற முடிவதில்லை.
தங்கள் பின்னூட்டம் மிக அருமைங்க. நான் சொல்ல வந்த கருத்தும் அதுவே.
நன்றி நண்பரே :)
ஆகா,
ReplyDeleteசிறுவயதில் பார்த்தது. அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு போய்விட்டது பொன்வண்டு என்னை அந்தக் காலத்திற்கு. திரிந்து அலைந்து பொன்வண்டு பிடித்து, தீப்பெட்டிகுள்ளே திணித்து அடைத்து , பள்ளிப் பைக்குள் பத்திரமாய் வைத்த பொன்வண்டு எப்படி பறந்ததென தெரியவில்லை இன்றுவரை. ஓகோ உங்கள் நகரத்து மாடிகளில் தான் தேடிக் கொண்டிருக்கிறதோ என்னை ?
அருமை நண்பா.. நாமும் தான் அந்த பொன்வண்டு மாதிரி இருக்கிறோம் தனக்கான இடம் எதுவென்று தெரியாமல்.
To RVS
ReplyDeleteபொன்வண்டு கொன்றைமரக் காடுகளில் இருக்கும்..முக்கியமாக கொன்றை இலைகள் தான் அதன் உணவு
RVS
ReplyDeleteபொன்வண்டு கொன்றைமரக் காடுகளில் இருக்கும் .முக்கியமாக கொன்றை இலைகள் தான் அதன் உணவு.
@சிவகுமாரன்
ReplyDeleteபொன்வண்டுகளைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள்.
//நாமும் தான் அந்த பொன்வண்டு மாதிரி இருக்கிறோம் தனக்கான இடம் எதுவென்று தெரியாமல். // Nice lines..
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இளங்கோ..
ReplyDelete