Thursday, March 18, 2010

தண்ணீர்.. தண்ணீர்..

தண்ணீர்.. இது இல்லையென்றால் உயிர்களின் வாழ்வு அவ்வளவுதான். திருவள்ளுவர் கூட மழை இல்லையெனில், பசும் புல் கூட தலை நீட்டலரிது என்கிறார்.

காடுகளை அழித்து, மரங்களை வெட்டி சாம்பல் ஆக்கிவிட்டோம். வெய்யில் எரிக்கிறது என்று புலம்புகிறோம். இளநீர் குடித்தும், தர்பூசணி சாப்பிட்டும் தாகம் தணிக்கிறோம். காட்டில் உள்ள விலங்குகள் என்ன செய்யும். ஒருவேளை கால போக்கில் கடல் நீரில் இருந்து பெற்று கொள்வீர்கள். நம் நாட்டு விலங்குகள் தண்ணி இல்லாமல் மடிய வேண்டுமா?.

வெளிநாட்டு தோழி பேசும்பொழுது சொன்னது "எனக்கு இந்தியாவை பிடிக்கும். அங்குதான் யானைகளும், குரங்குகளும் நிறைய உள்ளன" என்றாள். அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை காப்போம் என கூவுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற விலங்குகளையும் இழந்து விடுவோமா நண்பர்களே ?.

அனைத்துக்கும் ஆதாரம் தண்ணீர். அதை இழந்துவிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது. நம்மால் முடிந்த சிலவற்றை செய்யலாம்.

- முடிந்த அளவு நீரை குறைவாக பயன்படுத்துங்கள். முழுவதும் குழாயை திறந்து விட்டு வீணாவதை தடுங்கள்.
- குழாயில் நீர் வீணாவது தெரிந்தால் நன்றாக அடைத்து விடுங்கள்.
- தோட்டம் செடிகள் வைத்திருந்தால் கழிவு நீரை எப்படி உபயோகிக்கலாம் என திட்டமிடுங்கள்.

பதிவர் திரு வின்சென்ட் அவர்கள் தனது வலையில் உலக தண்ணீர் தினம் பற்றி எழுதி உள்ளார். அதற்கான இணைப்பு. http://maravalam.blogspot.com/2010/03/blog-post_10.html

நெஞ்சில் அறைவது போல ஒரு படம் கீழே. தண்ணீர் நம்மை காப்பற்றியது போல, நாம் தண்ணீரை காப்பாற்றுவோம்.

4 comments:

  1. "அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை காப்போம் என கூவுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற விலங்குகளையும் இழந்து விடுவோமா நண்பர்களே"?.

    இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் இழந்து விடுவோம்.

    அனைத்துக்கும் ஆதாரம் தண்ணீர். அதை இழந்துவிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது.

    புரிந்து கொண்டால் வாழ்கை இன்பம்.

    ReplyDelete
  2. இளங்கோ..

    என்னுடைய கார்பன் சுவடுகள் 5 பகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய இடுகை.. மறக்காமல் படியுங்கள். விலங்குகளுக்கும் நமக்கும் கண்ணுக்குத் தெரியாத பிணைப்பு உள்ளது.. மாற்றம் வரும் என நம்புவோம்.. முதலில் மனிதர் உள்ளங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.புரட்சி ஒன்று ஏற்பட வேண்டும்.. நன்றி..

    ReplyDelete
  3. //
    வின்சென்ட் said...

    "அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை காப்போம் என கூவுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற விலங்குகளையும் இழந்து விடுவோமா நண்பர்களே"?.

    இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் இழந்து விடுவோம்.

    அனைத்துக்கும் ஆதாரம் தண்ணீர். அதை இழந்துவிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது.

    புரிந்து கொண்டால் வாழ்கை இன்பம்.
    //
    திரு.வின்சென்ட், தங்களின் வருகைக்கு நன்றி. உங்களின் பதிவை பார்த்துதான் இந்த பதிவையே பதிந்தேன்.
    நன்றி

    ReplyDelete
  4. //
    பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    இளங்கோ..

    என்னுடைய கார்பன் சுவடுகள் 5 பகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய இடுகை.. மறக்காமல் படியுங்கள். விலங்குகளுக்கும் நமக்கும் கண்ணுக்குத் தெரியாத பிணைப்பு உள்ளது.. மாற்றம் வரும் என நம்புவோம்.. முதலில் மனிதர் உள்ளங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.புரட்சி ஒன்று ஏற்பட வேண்டும்.. நன்றி..

    //

    பிரகாஷ், தங்களின் வருகைக்கு நன்றி. நான் ஏற்கனவே சில பகுதிகளை படித்து விட்டேன். நேரம் இருக்கும் பொழுது திரும்பவும் வாசிக்கிறேன்.

    ReplyDelete