Sunday, January 25, 2009

அரச மரத்தடி நடசத்திரங்கள்

கிளைவிட்டுப் பரவிய
அரச மரத்தை சுற்றிலும்
வெள்ளை நட்சத்திரங்களாய்
பறவைகளின் எச்சங்கள்
பூத்து கிடந்ததொரு நாளில்
ஊர்ப் பஞ்சாயத்து கூடி
வெட்டுவதென
முடிவு செய்தனர்

மரத்தின் வேர்
சுற்றியுள்ள வீடுகளில்
ஊடுருவுகின்றதாம்

மீண்டும் தழைத்து விடுமென
அடிமரத்தை தோண்டிய
குழியில்
உச்சியில் கட்டப்பட்டிருந்த
ஏதோவொரு பறவையின்
கூடும் முட்டைகளோடு புதைபட்டது

இடம் மாறிய பறவைகள்
இன்னொரு மரத்தடியில்
எச்சமிட்டு
கொண்டிருக்க கூடும் !

4 comments:

  1. உங்கள் கவிதையின் ஆதங்கம் புரிகிறது.. உங்களுக்கு மிக மென்மையான உள்ளம்... வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  2. மரங்களை வெட்டி கொண்டே இருக்கிறார்கள். இது எங்க போய் முடியுமோ?
    குருவி, கிளி என விலங்குகள் அழிந்து கொண்டே வருகின்றன. யார் தடுப்பது ?
    நன்றி

    ReplyDelete
  3. என்னமோ போங்க!..

    ReplyDelete