Posts

அமிழ்தினும் அமிழ்து

Image
ஒரு தம்ளர் காப்பித் தண்ணியும் கொஞ்சம் பொட்டுக் கடலையும் கொண்டு வந்து தின்னத் தந்துவிட்டு 'என்கிட்டே வேறென்ன இருக்கு' என்று தள்ளாமையில் புலம்பிக் கொண்டிருக்கும் பாட்டிக் கிழவியிடம், இது அமிழ்தினும் அமிழ்து என்பதைச் சொல்ல வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். குறிப்பு : இப்பதிவில் இருக்கும் படம் , பதேர் பாஞ்சாலி படத்தில் வரும் பாட்டி . **************

பெருமூச்சு

Image
மேள சத்தங்கள் ஜொலிக்கும் மேடைகள் ஆயத்த சிரிப்புகள் உருட்டப்படும் பாத்திரங்கள் மணக்கும் உணவுகள் பரபரக்கும் மனிதர்கள் விளையாடும் குழந்தைகள் என நிறைந்து கிடக்கும் திருமண மண்டபத்தின் வாசலை, வீதியில் கடக்கும் யாரேனும் ஒருவரின் பெருமூச்சு நிரப்பி விட்டுச் செல்கிறது. படம் : இணையத்திலிருந்து : நன்றி. ************************

சிறு துளிகள் (23/11/2010)

Image
பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...

அழைப்பு வராத இரு எண்கள்

" ஹலோ பிரகாஷ் ” “ மச்சி , எப்படிடா இருக்க ?” “ நான் நல்லா இருக்கேன் , அப்புறம் நான் நாளைக்கு சென்னை கெளம்பனும் .. மண்டே நியூ கம்பெனில ஜாயின் பண்ணனும் . உன்கிட்ட சொல்லனும்னுதான் கூப்பிட்டேன் டா ” “ ஓகே டா மச்சான் , ஆல் த பெஸ்ட் , போன் பண்ணு .. ஊருக்கு வந்தா கூப்பிடு என்ன ” “ சரிடா ..” என்று போனை வைத்தேன் . இந்த உரையாடல்தான் அவனிடம் நான் பேசிய கடைசி பேச்சாக இருக்குமென்று , இன்னும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை . ஒரு வருடத்துக்கும் முன்னால் , பிரகாஷ் , நான் மற்றும் சில நண்பர்கள் ஒரே கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தோம் . எனக்கப்புறம் வந்து சேர்ந்தவன் என்பதால் , முதலில் வாங்க , போங்க என்று கூப்பிட்டு பின்னர் வா , போ என சுருங்கி , கடைசியில் டாய் மச்சி வரை வந்து விட்டது எங்களின் நட்பு . இதில் கூத்து என்னவென்றால் , என் நண்பர்களை வாங்க , போங்க எனக் கூப்பிடுவான் . அவனிடம் கேட்டதற்கு , " டாய் மச்சான் நீ நம்ம ஆளு .. அவங்கள அப்படி கூப்பிட முடியல .. நீ அப்படி இல்லடா .." என்றான் . எனக...

பெய்யும் மழை

Image
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடாதாகையால் சிநேகமாய் ஆதரவாய் மோனத் தவமாய் உயிர்த் துளிகளாய்ப் பெய்து கொண்டிருக்கிறது மழை... பெய்யும் மழையை எதிர்த்துக்கொண்டு நீள்சாலைகளில் விரைகிறது என் வாகனம் எந்தச் சலனமுமின்றி.. படம் தந்த தளம் : http://www.artiststranger. com

சத்துணவுக்காக ஒன்றரை கி.மீ

Image
இன்றைய தின மலரில் "சத்துணவுக்காக" ஒன்றரை கி.மீ., தட்டுடன் நடந்து செல்லும் மாணவச் செல்வங்களைப் பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அந்தச் செய்தியின் சுட்டி: சத்துணவுக்காக 3 கி.மீ., தூரம் நடந்து செல்லும் மாணவர்கள் ஒரு மந்திரி வருகிறார் என்றால் புதுச் சாலைகள் ஓரிரு நாட்களில் போட முடிந்த இவர்களால், இந்தக் குழந்தைகளுக்கு ஒரு கட்டிடம் அமைத்து தர இயலவில்லை. சரி இந்தக் குழந்தைகளுக்கு செலவு செய்ய நிதி இல்லை போலும். ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில் - "கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? " என்று கூறியது முற்றிலும் உண்மை. நன்றி : தினமலர் - புகைப்படம் மற்றும் செய்தி.

சொல்லிக்கொடுத்த பாரதி..

Image
தமிழ் மேல் எனக்கும் ஆர்வம் ஏற்பட காரணம் மகாகவி பாரதியார். பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளுக்கும், கட்டுரைப் போட்டிகளுக்கும் வேண்டி பாரதியைப் படிக்க ஆரம்பித்தவன் நான். கொஞ்சம் கொஞ்சமாக அவரின் கவிதைகள் என்னை ஈர்த்தன. ஒரு கவிஞராக, காதலராக, போராட்ட குணம் நிரம்பியவராக, தமிழ் ஆர்வம் மிக்கவராக, எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து உயிர்களையும் நேசித்த ஒரு மா மனிதன் பாரதி. "காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம் " - என்று நேசித்தவர் பாரதி. சாதி வெறியும் தீண்டாமையும் மிகுந்திருந்த காலத்தில் 'சாதிகள் இல்லையடி பாப்பா.. ' என்று ஓங்கி குரல் கொடுத்தவர் பாரதி. ஆனால் காலங்கள் மாறியும் இன்னும் சாதிக் கொடுமை தீரவில்லை பாரதி. இந்தக் கவிதையை யார் படித்தாலும், சிறு மாற்றமாவது மனதில் வரும். "தேடிச் சோறு நிதந் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் மிக வாடித் துன்புற்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் சில வேடிக்கை மனிதரைப் போல் நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ.. " "தழல் வீரத்தில் குஞ்சென்றும்...