Posts

யாரையோ...

"டேய் மாப்ள.. என்ன பார்த்து யார்னு கேட்டுட்டாடா" என புலம்பி கொண்டிருந்தான் ராசு ஒரு இரவு நேர பாரில். வெளியே எங்காவது போலாம் என நினைத்திருந்த போதுதான், ராசுவின் அழைப்பு மணி என் செல்போனில் ஒலித்தது. மனசு சரியில்லை என்றும், எதாவது பாருக்கு போலாம் என்றான். என்ன காரணம் எனக் கேட்க, அதெல்லாம் வந்து சொல்லுறேன், கெளம்பி வா என்றான். பாருக்கு போனதும் அவனே ஆர்டர் பண்ணினான். கொஞ்சம் உள்ளே போனதும், புலம்ப ஆரம்பித்தான். "டேய் இன்னைக்கு காலைல நதிய பாக்க போனேண்டா" நதி என்பது அவனின் காதலி நதியாவின் குறும்பெயர். "என்ன பார்த்து, யாருன்னு கேட்டுட்டாடா" என்றான். எனக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. நடு நிசி வரையில் புலம்பி கொண்டிருந்தவன் போதையில் தூங்கிப் போனான் அன்று. அடுத்த நாள் இருவரும் போனில் கொஞ்சிக் குலவியதை நான் பார்க்க நேர்ந்தது. ஊடலும் பின்னர் காதலும் எப்பொழுதும் இனிப்பானவை தானே ?. நற்றிணை, பழந்தமிழ் இலக்கியம். அதை நேற்று படிக்க, கீழ்வரும் ஒரு பாடல் என்னைக் கவர்ந்தது; நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணியார்ப்பத் தெருவில் தேர்நடை பயிற்று ...

செம்மொழி மாநாட்டில்....

இன்று நண்பர்கள் இருவர் , செம்மொழி மாநாட்டுக்கு சென்றார்கள் . கலைஞரின் புகழ்களை கேட்டு விட்டு , மதியம் முப்பது ரூபாய் குடுத்து உணவு வாங்கி இருக்கிறார்கள் . தயிர் சாதம் , புளி சாதம் , சிப்ஸ் , ஊறுகாயோடு இருந்தது ஒரு இனிப்பு அல்வா துண்டு ... சொல்லாமல் சொல்லி விட்டார்கள் மாநாட்டை நடத்தியவர்கள்.. புரியாமல் நாம் மரமண்டைகளாக இருந்தால் அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள் .... :)

சிட்டி லைட்ஸ்

Image
சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு சிட்டி லைட்ஸ் . அடுத்தவனைப் பற்றி கவலை படாத மனிதர்களுக்கு மத்தியில் , சக உயிர்களின் மீது அன்பு செலுத்துவதை பற்றி தம் படங்களில் போதித்தார் . நகைச்சுவை என்பது சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் செய்த மாபெரும் மனிதன் . உலகை தனது நடிப்பின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர் . சிட்டி லைட்ஸ்: ஓரிடத்தில் ஒரு கண் தெரியாத பெண்ணை சாப்ளின் பார்க்க நேரிடுகிறது . அவளை பற்றி மிகவும் கவலை கொள்கிறார் சாப்ளின் . அந்த பெண் பூ விற்று தனது பாட்டியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறாள் என்பதை அறிந்து கொள்கிறார் . ஒரு நதியின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு பணக்காரன் தற்கொலைக்கு முயல , அதை தடுக்கிறார் சாப்ளின் . அவரை காப்பாற்ற போய் சாப்ளின் தண்ணிக்குள் விழுவது , பிறகு இருவரும் சேர்ந்து விழுவது , எப்படியோ இருவரும் மேலே ஏறி வருவது ... எப்படியோ இருவரும் மேலே வருகிறார்கள் . பின்னர் அந்த பணக்காரன் தனது வீட்டுக்கு சாப்ளினை அழைக்க, அவரும் செல்கிறார் . போதையில் இருக்கும்பொழ...

செம்மொழி மாநாடு மற்றும் டாஸ்மாக் தாராளம்

புது சாலைகள் , புது விளக்குகள் , புது கட்டிடங்கள் ... என கோலம் (!) கொண்டு நிற்கிறது கோவை , செம்மொழி மாநாட்டுக்காக . மாநாடு நடந்து முடிந்த பின்னர்தான் தெரியும் , தமிழ் எப்படி இருக்கிறதென்று . எப்படி இருந்தாலும் ' பை மா ', ' ஹாய் டாடி ', ' ஹொவ் ஆர் யு ', ' வெரி குட் '..... போன்றவைகள் நம்மிடம் இருந்து மாற போவதில்லை . வரும் தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுக்க போவதும் இல்லை . தமிழ் படித்தால் சம்பாதிக்க முடியாதென்று நம் மக்களின் மண்டையில் பதிந்து எவ்வளவோ நாட்களாகி விட்டன . போன வாரம் இரண்டு குழந்தைகளை பார்த்தேன் . இரண்டு குழந்தைகளின் பெற்றோரும் ஒரு நல்ல அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் . அவர்களுக்கும் அந்த குழந்தைகளுக்கும் நடந்த உரையாடல்கள் இப்படித்தான் இருந்தன . 'Oh Dear.. dont do that', 'please ma...', 'why are you crying now?' இப்படித்தான் ... ஒரு குழந்தை போனில் சொல்லியது 'mom.. scolding me.. ' .... எப்படியோ தமிழ் வளர்ந்தால் சரிதான் . இன்றைய தினமலரில் ஒரு செய்த...

ஜோசியம்

" எட்டாமிடத்தில் சனி இருக்க துன்பம் போகுமப்பா நாலாமிடத்தில் செவ்வாய் இருக்க " எனப் பாடிக் கொண்டே சென்றார் ஜோசியர் . அவருடைய பேர் என்னவென்றே எனக்கு தெரியாது . ஆனால் ஜோசியர் என்றால் ஊருக்கே தெரியும் . சுற்றி உட்கார்ந்து இருந்த அனைவரும் அவரையே உற்று பார்த்து கொண்டிருந்தோம் . கணீரென்ற குரல் , வயதாகி விட்டதால் சற்று பிசிறடித்தது . கிருபானந்த வாரியாருக்கு அண்ணன் போலிருப்பார் . நான் பார்த்த முதல் சுருட்டு பிடித்தவர் இவர்தான் . பக்கத்தில் போனாலே சுருட்டு வாசம் வீசும் . மனைவி மகன் இல்லாததால் தனியாகத்தான் இருந்தார் . அவராகவே சமைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தார் . பக்கத்துக்கு ஊரில் இருந்தெல்லாம் சிலர் வந்து ஜோசியம் கேட்டு விட்டு போவார்கள் . ஒரு சிலர் , பைக்கில் உட்கார வைத்து வீட்டுக்கே கூட்டிபோய் ஜோசியம் பார்த்துவிட்டு திரும்ப கொண்டு வந்து விடுவார்கள் . எங்கள் வீட்டுக்கு மாமா அத்தை மற்றும் சில சொந்த காரர்கள் வந்தால் ஜோசியம் பார்க்க வேண்டும் என்பார்கள் . உடனே என்னை அவருடைய வீட்டுக்கு அனுப்பி , அவரை ...

வாழ்க்கைப் பயணம்

ஒரு சனிக்கிழமை காலையில் , தாம்பரம் செல்வதற்காக குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன் . சனிக்கிழமை என்பதாலும் , அலுவலக நேரத்தை தாண்டி விட்டதால் கூட்டம் அதிகமில்லை . மின்தொடர் வண்டி வந்து சேர்ந்ததும் பெட்டியில் ஏறினேன் . பெட்டிக்குள் நான்கைந்து பேர்களே இருந்தார்கள் . காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தேன் . அப்பொழுதுதான் கவனித்தேன் , எனக்கு எதிராக இரண்டு இருக்கைகள் தள்ளி , ஐம்பது வயது உள்ள ஓர் அம்மா அமர்ந்திருந்தார் . அவருக்கு பக்கத்தில் நல்ல உடம்புடன் ஒரு இருபத்தி ஐந்து வயசுள்ள பையன் உட்கார்ந்திருந்தான் . ஒண்ட வெட்டிய தலையுடன் , சிரித்து கொண்டே வந்தான் . சட்டையும் , டவுசரும் மட்டுமே அணிந்திருந்தான் . பார்த்த கொஞ்ச நேரத்திலயே மன நிலை குறைபாடுள்ளவன் என்று தெரிந்தது . அந்த அம்மா சோகமே உருவாக அமர்ந்திருந்தார் . வாழ்வில் எண்ணற்ற துயரங்களையும் பார்த்த சுருக்கம் முகத்தில் படர்ந்திருந்தது . அவன் அவ்வபொழுது முகத்தை திருப்பி சிரிப்பதும் , மெதுவாக கையால் அம்மாவை செல்லமாக அடிப்பது போல் செய்து கொண்டே வ...

எப்படி சொல்வது...

Image
எல்லாவற்றையும் சொல்லி விட முடிகின்றது.. சொந்தங்கள் ஆசையாக கட்டிய வீடு பிறந்த மண் வெளியில் வைத்திருந்த ரோஜா செடி கருப்பு பூனை குட்டி சேகரித்த புத்தகங்கள் குமிழ் போட்ட கதவு என எல்லாமே வந்து போகும் நடுநிசியில் அயல் நாட்டுக்கு வந்து அகதியாய் தவிப்பதை எப்படி சொல்வது ? "ஏப்பா.. இங்கே வந்தோம்" என கேட்கும் மகளிடம்....... (புகைப்படம் என் கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னால் எடுத்தது)