Monday, January 3, 2011

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 2

உனது கைப்பேசிக்கு
அழைத்தால்
முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது..
நீ பேச ஆரம்பித்த பின்னர்தான்
மெல்லிசை கேட்கிறது..

*******************************

சுருட்டிப் போட்ட
பழைய போர்வையாய்
நடந்து கிடக்கிறேன் சாலைகளில்
ஒரு நாளேனும்
திரும்பி புன்னகை
பூத்து விட்டுப் போ.
அன்று முதல் நான்
பறக்க ஆரம்பிப்பேன்..


20 comments:

  1. முதல் கவிதையில் வார்த்தை மயக்கம் அள்ளுகிறது.
    இரண்டாம் படைப்பு படபடப்பு...

    ReplyDelete
  2. //சுருட்டிப் போட்ட
    பழைய போர்வையாய்//
    இந்த வார்த்தைகள் நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  3. மெல்லிசை மயக்குது ஆளை :)

    ReplyDelete
  4. @ஷஹி
    நன்றிங்க ஷஹி..

    ReplyDelete
  5. @பாரத்... பாரதி...
    கவிதையை ரசித்ததற்கு நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  6. @சண்முககுமார்
    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  7. //Balaji saravana said...

    மெல்லிசை மயக்குது ஆளை :)
    //

    காதலித்தால் பேச்சு கூட மெல்லிசையாக மாறி விடும் அல்லவா?

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. ரசிச்சு படிச்சேன்.....

    ReplyDelete
  9. போன வருஷம் சும்மா எழுதியே தள்ளீட்டேன்.. இந்த வருஷம் எல்லாரும் கவனமா இருங்க.. என்னோட முரட்டுக் கவிதைகளோடு உங்களைத் தாக்கவிருக்கிறேன்..

    மத்தபடி உங்கள் மெல்லிசைக் கவிதை அருமை..

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

    ReplyDelete
  11. //பழைய போர்வையாய்//
    பழைய பேப்பராய் கரெக்ட்டா இருக்குமோ...

    மெல்லிசை.. பறக்கறது.. ஒரு ரேஞ்சாத்தான் போய்கிட்டு இருக்கீங்க...
    கவிதை நல்லா இருக்கு.. ;-)

    ReplyDelete
  12. //ஆமினா said...

    ரசிச்சு படிச்சேன்.....
    //

    நன்றிங்க..

    ReplyDelete
  13. @சாமக்கோடங்கி

    நன்றிங்க பிரகாஷ்.
    வாங்க, வாங்க நிறைய கவிதைகள் எழுதுங்கள்..
    Advance wishes...

    ReplyDelete
  14. @எஸ்.கே
    நன்றிகள் நண்பரே.
    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. @RVS
    ஆமாங்க அண்ணா, 'பழைய பேப்பர்' கூட நல்லாத்தான் இருக்கு.

    நீங்க பார்க்காத ரேஞ்சா... :)

    நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  16. "உனது கைப்பேசிக்கு
    அழைத்தால்
    முதலில் ஏதோ ஒரு இசை கேட்கிறது..
    நீ பேச ஆரம்பித்த பின்னர்தான்
    மெல்லிசை கேட்கிறது.."

    Elango, really superb... nama onna wrk panumpodu neenga ipdiellam kavidai yeluduvingannu enaku teriyamalae poiduchu... unga ella kavidaum romba nalla iruku.. :)

    elarum tamil la comment panirukanga, enaku epdi tamil la panaradunu teriyala.. epdi inga language choose panaradu nu sollunga elango...

    ReplyDelete
  17. கண்டு புடிச்சுட்டேன் இளங்கோ :)

    side la irundatha gavanikkala... :P

    ReplyDelete
  18. @Arunkumar
    வாங்க அருண், எப்படி இருக்கீங்க?

    அப்போ எல்லாம் எழுத முடியல, ஏதோ இப்போ கொஞ்சம் நேரம் கிடைக்குதுங்க.

    அப்பப்போ வந்து போங்க நம்ம ப்ளாக் பக்கம். :)

    ReplyDelete