Wednesday, July 7, 2010

களம்

அவனுக்கும் இவனுக்கும் பகை
களத்தில் நின்றார்கள்

ஒருவன் ஐநூறு என்றும்
ஒருவன் ஐந்தாயிரம் என்றும்
கொன்றார்கள் பகைவர்களை

இறுதியில்
ஐந்தாயிரம் கொன்றவனே
வெற்றி பெற்றவன் ஆனான்

அவனே நாயகனும்
அவனே பாட்டுடைத் தலைவனும் ஆனான்
அதிகம் கொன்றவனே
அரியணையிலும் அமர்ந்தான் !!

4 comments:

  1. ஐந்தாயிரத்து ஐநூறு பேரின் இழப்பில் ஒருவன் தலைவன்.. இயற்கையின் நீதி என்றும் புரிவதில்லை...
    அழகான ஒரு புள்ளி மானைக் தொலைக்காட்சியில் காண்கையில் அப்படியே அதன் மீது வந்து பாயும் சிங்கம், இயற்கையின் கணக்கை நமக்கு விளங்காப் புதிராய் உணர்த்துகிறது அல்லவா இளங்கோ...?

    ReplyDelete
  2. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... ஐந்தாயிரத்து ஐநூறு பேரின் இழப்பில் ஒருவன் தலைவன்.. இயற்கையின் நீதி என்றும் புரிவதில்லை...
    அழகான ஒரு புள்ளி மானைக் தொலைக்காட்சியில் காண்கையில் அப்படியே அதன் மீது வந்து பாயும் சிங்கம், இயற்கையின் கணக்கை நமக்கு விளங்காப் புதிராய் உணர்த்துகிறது அல்லவா இளங்கோ...? //

    ஆம் பிரகாஷ்.. எவன் அதிகம் கொல்லும் திறமை உள்ளவனோ அவன்தான் தலைவனாக இருப்பான்.. சிங்கம் கூட காட்டின் அரசன்தான்..

    ReplyDelete
  3. //ஷஹி said...

    This is superb Ilango...
    //

    Thank you.

    ReplyDelete