பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...
ஐந்தாயிரத்து ஐநூறு பேரின் இழப்பில் ஒருவன் தலைவன்.. இயற்கையின் நீதி என்றும் புரிவதில்லை...
ReplyDeleteஅழகான ஒரு புள்ளி மானைக் தொலைக்காட்சியில் காண்கையில் அப்படியே அதன் மீது வந்து பாயும் சிங்கம், இயற்கையின் கணக்கை நமக்கு விளங்காப் புதிராய் உணர்த்துகிறது அல்லவா இளங்கோ...?
//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... ஐந்தாயிரத்து ஐநூறு பேரின் இழப்பில் ஒருவன் தலைவன்.. இயற்கையின் நீதி என்றும் புரிவதில்லை...
ReplyDeleteஅழகான ஒரு புள்ளி மானைக் தொலைக்காட்சியில் காண்கையில் அப்படியே அதன் மீது வந்து பாயும் சிங்கம், இயற்கையின் கணக்கை நமக்கு விளங்காப் புதிராய் உணர்த்துகிறது அல்லவா இளங்கோ...? //
ஆம் பிரகாஷ்.. எவன் அதிகம் கொல்லும் திறமை உள்ளவனோ அவன்தான் தலைவனாக இருப்பான்.. சிங்கம் கூட காட்டின் அரசன்தான்..
This is superb Ilango...
ReplyDelete//ஷஹி said...
ReplyDeleteThis is superb Ilango...
//
Thank you.