Posts

பேச்சிலர் சமையல்: தக்காளி சாதம்

Image
நாங்கள் நண்பர்கள் சென்னையில் தங்கியிருந்த பொழுது நாங்களே சமைத்து(!) சாப்பிட்டோம். சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், கைக் காசையும், வயிற்றையும் பாதிக்காமல் இருந்தது. ஒரு சிலர் இந்தப் பதிவை படித்து சமைக்க கற்றுக் கொண்டால் மகிழ்ச்சியே. தேவையான பொருட்கள்:  அரிசி - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு  பெரிய வெங்க்காயம் - மூன்று  பழுத்த தக்காளி - நான்கு   மிளகாய் - நான்கு  பூண்டு, மிளகாய் - ஐந்து  சீரகம், கடுகு, கடலைப் பருப்பு - தாளிக்க  கொத்தமல்லி தழை , கறிவேப்பிலை தழை - சிறிதளவு    உப்பு, மஞ்சள் பொடி - தேவையான அளவு  குக்கர்  கரண்டி  காஸ்கட்  குக்கர் வெய்ட் (இதெல்லாம் தேவையா என்று கேட்பவர்களுக்காக, இப்படிதான் ஒருநாள் சாப்பாட்டைத் தாளித்துவிட்டு இன்னொரு நண்பனிடம் 'கொஞ்ச நேரம் கழிச்சு குக்கர் மூடிய போட்டு மூடிட்டு வெய்ட் போட்ரு' என்று சொல்லிவிட்டு வந்தோம். அரட்டை அடித்துக் கொண்டிருந்ததில்  மறந்து, அரைமணி நேரத்துக்...

சாம்பலும் பனியும் (Ashes and Snow)

Image
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது வலையில் சாம்பலும் பனியும் (Ashes and Snow)  என்ற இந்த ஆவணப்படத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதன் பிறகுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். யாரும் தவற விடக் கூடாத ஆவணப்படம். ஒரு காலத்தில் மனிதனும், விலங்குகளும் ஒன்றாக காட்டில் தான் வாழ்ந்திருப்பார்கள்.  காலங்கள் மாற அவர்களுக்கு இடையிலான தூரங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனாலும் அவர்களுக்கு இடையிலான அந்த அன்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நமக்கு காட்சிப்படுத்துகிறது இந்த ஆவணப் படம். சிறுத்தைப் புலியின் அருகில் அமர்ந்திருக்கும் தாத்தா மற்றும் சிறுவன், யானைகளோடு விளையாடும் பெண்கள், பறவைகளுடன் நடனமாடும் பெண்.. என ஆச்சரியத்தில் ஆழ்த்தும். மொழிகள் இல்லாமல்,  அங்கே சக உயிர் மீதான அன்பு மட்டுமே முன் நிற்கிறது. சிறுத்தை கடிக்கும் என்ற பயமில்லாமல் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனைப் போன்றவர்களே இன்னும் இந்த இயற்கையை அழியாமல் காப்பாற்றி வருகிறார்கள். அந்தச் சிறுவனுக்கு காதில் ஏதோ சொல்லிக் கொடுக்கும் அந்தத் தாத்தாவின் வயது காலங்களை தாண்டி நிற்பது போல முகத்தில் எத்தனை சுருக்கங்...

அசடன் (இடியட்)

Image
'குற்றமும் தண்டனையும்' நாவலுக்குப் பிறகு எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள், பியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் 'இடியட்' நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலை மொழியாக்கம் செய்த சுசீலா அம்மா அவர்களின் உழைப்புக்கு என் வணக்கங்களும் நன்றிகளும். இப்படி ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்து அதை வெளியிட்ட மதுரை பாரதி புத்தகாலயம் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள். (முதலில் இருப்பவர் எம்.ஏ. சுசிலா) சாலையில் செல்லும்போது முன்பின் தெரியாத ஒரு குழந்தை நமக்கு ஒரு முத்தமோ அல்லது ஒரு புன்னகையையோ  வீசிச் சென்றால், அந்த கணத்தை பதிவு செய்வதென்பது கொஞ்சம் கடினம். அது போலவே, மிகப் பெரிய படைப்பான இந்த 'அசடன்' நாவலில் நான் உணர்ந்ததை சொல்வது கொஞ்சம் கடினம். எவ்வளவு எழுதினாலும் இன்னும் போதவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் நான் புரிந்து கொண்ட வரையில், இங்கே சொல்ல முயல்கிறேன். ********************************* என் பார்வையில்: 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் இறைவனை வேண்டுகிறார். உள்ளே ஒன்ற...

வீடிலிகள்

Image
அன்றும் அப்படிதான் அந்த ஆள் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு, வீதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான். அவன் என்று சொல்வது தப்பு, ஏனெனில் அந்த ஆளுக்கு ஐம்பது வயசுக்கு மேலிருக்கும். இந்த மேன்சனுக்கு வந்த இந்த ஒரு வருட காலத்தில், இது போன்ற வயதானவர்கள் தங்கி நான் பார்த்ததில்லை. கல்லூரி செல்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் என வெளியூரிலிருந்து வந்து தங்கி இருப்பவர்களின் வயதைப் பார்த்தால் முப்பதுக்குள்தான் இருக்கும். இருவர் தங்கிக் கொள்ளும் அறையில் நாங்கள் தங்கி இருந்தோம். முப்பது ரூம்கள் இருக்கும் இந்த மேன்சனில், நாங்கள் இருந்தது இரண்டாவது தளத்தில் வலப்புறம். காலையில் போய்விட்டு இரவு வரும்பொழுது யாரையும் கவனிக்க முடியாது என்றாலும், இந்த புது ஆள் தினமும் காலையில் குறைந்தது இரண்டு மணி நேரம் பால்கனியில் நின்றும், நடந்தும் வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் மேன்சனில் தங்கி இருப்போரின், சொந்தமாகவோ, அப்பா அல்லது மாமாவாகவோ இருந்து, ஏதோ வேலையாக கொஞ்ச நாள் தங்கியிருந்துவிட்டுப் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால், ரொம்ப நாள் கண்ணில் தட்டுப் பட்டுக்கொண்டே இருந்தார். ஒருநாள...

சினிமா : 12 ஆங்ரி மென் (12 Angry men )

Image
வழக்கமான படங்களுக்கு முற்றிலும் மாறுபட்டது இந்தப் படம். மற்ற படங்களைப் போல் அல்லாமல், ஒரே அறையில் கதை ஆரம்பித்து அதே அறையில் முடிகிறது. கதை என்றும் சொல்வதற்கு இல்லை, 12 மனிதர்கள் படம் நெடுகிலும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள்?. ஒரு சிறுவன், தனது தந்தையைக் கொலை செய்து விட்டதாக,  நீதிமன்றத்தில் இருக்கிறான். இந்த வழக்கில் நீதிபதியைத் தவிர, பொது மக்களிலிருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களும் அந்த வழக்கில் நீதிபதியாக இருப்பார்கள். அப்படி இந்த வழக்கில் 12 பேர் நீதி மன்றத்தில் இருக்கிறார்கள். தலைமை நீதிபதி அவர்களிடம் வழக்கைப் பற்றிக் கூறி, இந்த வழக்கின் தீர்ப்பை அவர்கள் அனைவரும் கூடிப் பேசி சொல்லுமாறு கூறுகிறார். இது ஒரு கொலை சம்பந்தப்பட்டது என்றும், அதேபோல ஒருவனின் வாழக்கை பற்றியது என்றும் கூறும் அவர், சரியான காரணங்களை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என ஒரு அறைக்கு அனுப்பி விடுகிறார். உள்ளே சென்றதும், அனைவரும் இருக்கையில் அமர்ந்து, வழக்கைப் பற்றிப் பேசுகிறார்கள். அந்தச் சிறுவன், "குற்றம் செய்தவனா, இல்லையா" என்பதைத் ...

வயிற்றுப் பசி

பசி பொறுக்காமல் நீங்கள் திருடியது உண்டா? பசி தாங்காமல் குப்பையில் இருந்து கிடைத்ததை உண்டு வாழ்ந்தது உண்டா? ஒருவேளை சோற்றுக்காக காத்துக் கிடந்தது உண்டா? அ.முத்துலிங்கம் அவர்களின் இந்தக் கதையைப் படித்துப் பாருங்களேன். புளிக்கவைத்த அப்பம் கதையில் இருந்து சில வரிகள்: "இரவு பகலாக எங்களை விரட்டியது பசிதான். இந்த நாட்களில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. நாங்கள் ஒளித்து வாழ்ந்த காட்டில் ஒரு தேன்சிட்டும் வசித்தது. சாம்பல் வண்ணத்தில், மென்சிவப்பு தொண்டை கொண்டது. அதன் அலகு அதன் உடம்பிலும் நீளமாக இருக்கும். எந்நேரமும் வேகமாக சிறகசைத்து பறந்து தேன் குடிக்கும். ஒரு நாளைக்கு அதன் எடையளவு தேனை உண்டே ஆகவேண்டும். அல்லது உயிர் தரிக்காது. ஒரு நிமிடம்கூட ஓய்வெடுக்காமல் அது பறந்து தேடுவதைப் பார்க்க எனக்கு திகிலாக இருக்கும். அதன் நிலையும் என் நிலைபோலத்தான் இருந்தது. உயிர் வாழ்வதற்காக ஒவ்வொரு கணமும் பாடுபட்டது. எங்களில் யார் முதல் இறக்கக்கூடும் என நினைப்பேன். ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்தவுடன் அது உயிருடன் இருக்கிறதா என்று பார்ப்பேன். நான் முதலில் இறந்து அது என் உடலை பார்ப்பத...

நிலம்

Image
எவ்வளவோ மல்லுக்கட்டிப் பார்த்தாச்சு இந்த முக்கால் ஏக்கர் நெலத்தோட ஒரு வருசம் வெள்ளாமை வருது அடுத்த வருசம் நட்டம் இப்படித்தான் ரொம்ப வருசம் பொழப்பு ஓடுது. ரொம்ப வருசமா ஊட்ல சோறு, துணிமணி எல்லாம் அளவோடுதான். பாட்டன் வெச்சுட்டுப் போன சொத்து ரோட்டுக்குப் பக்கமா இருந்தது நல்லதாப் போச்சு.. பிளாட் போட வித்தாச்சு போன மாசம்.. நெலத்த வித்து வந்த காசு தர்ற வட்டில இப்போ மூணு வேளையும் சுடு சோறுதான் ஊட்ல.!