Wednesday, August 17, 2011

சிக்னல்















சிக்னல்


சிக்னலில்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
வாகனங்கள்

கைக்குட்டை, சாக்ஸ், பூ
மற்றும் இன்னபிற விற்கும்
சிறுவர்களின் கல்வியும்
அவர்களின் பால்ய சந்தோசங்களும்
அவர்கள் தொலைத்த நிமிடத்தில் இருந்து.
நகராமல் அப்படியே இருக்கிறது.

***************

ஆம்புலன்ஸ்

மனிதம் மறந்து
விட்டதன் அடையாளமாய்
அவசர வண்டிக்கு
வழிவிடச் சொல்லி
காவலர் ஓடிவருகிறார்.

***************

சுதந்திரம்

ஊரெல்லாம் சுதந்திர தினக்
கொண்டாட்டங்கள்
அன்றும் வாட்ச்மேன் தாத்தா
கொடியேற்றி காலையில் கொடுத்த
சாக்லேட்டோடு
வேலைக்கு வந்தார்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி.

5 comments:

  1. மிக அழகாகச் சொன்னீங்க நண்பா.

    ReplyDelete
  2. மூன்று கவிதைகளும் முத்துக்கள்... நச்... தொடருங்கள் இளம்-கோ

    ReplyDelete
  3. மூன்று கவிதைகளும்
    வித்தியாசமான சிந்தனையுடைய
    அருமையான கவிதைகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @முனைவர்.இரா.குணசீலன்
    @ஜெயசீலன்
    @Ramani

    நன்றிகள் நண்பர்களே..

    ReplyDelete