மாடித் தோட்டத்தில் - டிராகன் ப்ரூட் 

கோவை தமிழ்நாடு விவசாயப் பல்கலையில் பிப்ரவரி 2025 ல் நடைபெற்ற கண்காட்சியில் டிராகன் பழக் (Dragon Fruit) கன்றை வாங்கி வந்தோம். செம்மண், தென்னை நார் கழிவு மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை கலந்து தொட்டியில்(Grow bag) வைத்த பின்பு மெதுவாக வளர்ந்தது. 


இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறு மொட்டுகளாக ஐந்து அல்லது ஆறு பூக்கள் தோன்றியது. அவற்றில் ஒன்று மட்டுமே பெரிதாக வளர, மற்றவை சிறு மொட்டாகவே காய்ந்து உதிர்ந்து விட்டது. 

அந்த ஒரு பூ மட்டுமே மலர்ந்து பிஞ்சு விட்டது. கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் கழித்து மேல் தோல் கலர் மாறியவுடன் பறித்து அப்பொழுதே அறுத்தோம். கடைகளில் வாங்கியது போல் கொஞ்சம் சுவை குறைந்த பழமாக அல்லாமல், நல்ல சுவையுடன் இருந்தது. வெள்ளை நிற பழமாக இருந்தாலும் இருக்கலாம் என்று சிலர் சொல்ல, சிவப்பு நிற பழமாகவே இருந்தது மகிழ்ச்சி.

இந்த பழத்தை பறிக்கும்போது போன முறை போலவே நிறைய மொட்டுக்கள் விட்டு ஒன்றே ஒன்று மட்டும் பூத்திருக்கிறது. ஏதாவது சத்து இல்லாமையா, என்ன காரணம் என்று தெரியவில்லை. 

நிறமிக்க காய்கறிகளான பீட்ரூட், கேரட் போலவே இதிலும்  நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ( Antioxidants ) கொண்டதாகவும், வைட்டமின் C இருக்கும் பழமாக இது இருக்கிறது. அதிகமாக தண்ணீர் தேவைப்படாத கள்ளி இனத்தைச் சேர்ந்த பயிர் இது.

நம்மூர் கிராமங்களில் காணப்படும் கள்ளி பழத்தில் முட்கள் இருக்கும். சாப்பிட்டால் நாக்கு கொஞ்சம் அரிப்பது போல இருக்கும். இந்த பழத்தில் அது போன்ற முட்கள் இல்லை. செடியின் கணுவில் சிறு முட்கள் இருக்கிறது.

சிறு மொட்டாக 




















வளர்ந்த மொட்டு 




















பூப்பதற்கு முன்தினம் 




















பூத்த அன்று 
















பிஞ்சாக 
















பழுத்து நிறம் மாறிய பின்னர் 




















அழகான நிறத்தில் உள்ளே;






















Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை