கேரள முரல் ஓவியங்கள்
மிகச் சில வண்ணங்களைக் கொண்டு அழகாக வரையப்பட்டவை கேரள முரல் ஓவியங்கள். அந்தக் காலத்தில் இயற்கையான பொருட்களில் இருந்தே இந்த வண்ணங்கள் பெறப்பட்டன. உதாரணத்துக்கு வெண்மை நிறத்துக்கு சுண்ணாம்பும், கருமை நிறத்துக்கு நல்லெண்ணெய் விளக்கு தீபத்தின் மேல் கவியும் கருமையான மையையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். கோவில்களிலும், அரண்மனைச் சுவர்களிலும் இந்த வகை ஓவியங்களை கேரளாவில் நாம் இப்போதும் காணலாம். சில இடங்களில் உள்ள ஓவியங்கள் காலத்தை தாண்டியும் நமக்கு காட்சியளிக்கிறது. இப்பொழுது இந்த வகை ஓவியங்கள் துணிகளிலும் வரையப்படுகின்றன. எனக்கு இந்த வகை ஓவியங்களின் அழகு பிடித்துப்போக, ஓவியம் வரையத் தெரியாத எனக்கு வரைந்து பார்த்தால் என்னவென்று தோன்றியது. நான் வரைந்த இந்த இரண்டு ஓவியங்களுமே கேரளாவின் பள்ளிமன் னா மகாதேவர் கோவிலில் உள்ளது. முகம், கை வளைவுகள் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பல முறை முயன்று வரைந்தேன். பார்த்து வரைந்தாலும் மூலத்துக்கும் இதற்கும் வண்ணங்களின் கலவை, வளைவுகளின் நேர்த்தி ஒன்றல்ல. அக்ரிலிக் வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளேன். ஆலமர் செல்வன் / தட்சிணாமூர்த்தி Acrylic on canv...