Posts

Showing posts from May, 2026

நட்ராஜ் மகராஜ் - அதிகாரத்தின் முன் வரலாற்றின் நிலை

Image
பழைய இடிந்து போன ஒரு மாளிகையின் ஓரத்தில் பாம்புகளுடனும், பூச்சிகளுடனும் வசித்து வரும் ஒரு குடும்பத் தலைவனான 'ந' வின் கதை இந்நாவல். நாவலில் எல்லோருடைய பெயரும் ஒரு குறியீடு போல முதல் எழுத்து மட்டுமே. தா என்னும் ஊர், வ என்னும் பெயரையுடைய மனைவி என்று முதல் எழுத்து மட்டும்தான். படிக்கும் பொழுது இந்தக் குறியீட்டு எழுத்துக்கள் முதலில் புரிபடத் தடுமாறினாலும், நாவல் பின்னர் நம்மை அதற்குள் இழுத்துக் கொள்கிறது.  ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வரும் ந வுக்கு, அரசு வேலையாக பள்ளி சத்துணவுத் திட்ட அலுவலராக வேலை கிடைக்கிறது. இந்த வேலையைப் பெறவும் ஒரு சிலருக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறான். சம்பளம் குறைவு என்றாலும் அரசு வேலை என்ற மரியாதை இருக்கும் என்றே அவன் நினைக்கிறான். அரசுப் பள்ளியின் கணக்குகள், மாணவர்களுடைய உணவின் தரம் என்று அவனுக்கு புரியும்பொழுது சுற்றியுள்ளோர் அவனுக்கு, இந்த வேலையில் இருந்து எப்படி மேலும் சம்பாதிப்பது என பாடம் எடுக்கிறார்கள்.  அவன் அந்தப் பள்ளியில் சேர்வதற்கு முன்னர் இருந்த அலுவலர்கள் அரிசி பருப்பு போன்றவற்றை வெளியில் கடத்தி மற்றவர்களுக்கு க...