Saturday, April 11, 2009

குப்பையும் நானும்

கவிதை எழுதலாம்
என்றேன்
என்ன கவிதை எனக் கேட்டாய்
உன் பெயர் என்றேன்
என் பெயர்
குப்பை எனச் சொன்னாய்
'உன் பெயர்
குப்பைதான்
என்னைக் கசக்கி எறிந்து
உன்னுடனே
என்னையும்
குப்பையாக்கி விட்டாயல்லவா' என்றேன்
சிரித்துக்கொண்டே
தூரம் விட்டு தூரம் நகர்ந்து
காற்றோடு
கலந்து போனாய்
அன்று பெய்த மழை நாளில் !

Wednesday, April 8, 2009

ஒரு சுகம்

எனக்கு பிடித்த கவிதைகளில் ஒன்று இக்கவிதை.

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்டிக்
நிறைய ஐஸ்
ஒரு புட்டி
பிராந்தி
வத்திப்பெட்டி அல்லது சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்க்கு நீ
நண்பா
இந்த சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
-கவிஞர் நகுலன்