Posts

Showing posts from April, 2026

தேவதாஸ் - ஒரு மனிதனின் வாழ்க்கை

Image
ஆண்கள் தங்கள் முகத்தில் கொஞ்சம் தாடியோடு இருந்தால் 'என்ன தேவதாஸ் மாதிரி தாடியோடு இருக்க?'  என்றே நம் மக்கள் விசாரிப்பார்கள். அதனோடு கொஞ்சம் புகைப்பழக்கமும், குடியும் சேர்ந்துவிட்டால் அதுதான் தேவதாஸ். கூடவே காதல் தோல்வியும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம் மக்களிடம் பேசப்பட்ட காதல் ஜோடிகள் தேவதாஸ் - பார்வதி. அவர்கள் இருவரின் கைகூடாத காதலைச் சொல்லும் இந்த நாவல் வங்காளத்தில் 1917ல் வெளியாகி, பல மொழிகளில் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. இந்நாவல் பெற்ற செல்வாக்கையும், புகழையும் கண்டு  அதனை எழுதிய சரத் சந்திரரே திகைக்கிறார்.  தமிழில் வெளியான இந்நாவலுக்கு அசோகமித்திரன் முன்னுரை எழுதியுள்ளார். 'தேவதாஸ் - ஒரு சிறிய நாவல். ஆனால் அதில் வாழ்க்கையின் எந்த அம்சம் இல்லை?. நான்கைந்து பாத்திரங்களை மட்டும் உலவவிட்டுப் படைப்பாளி படைத்தது ஒரு விசாலமான, ஒரு நுணுக்கமான புனைகதை. அதே நேரத்தில் அது ஒரு சமூக வரலாறுமாகும். இவ்வளவு எளிதாகவும், அதே நேரத்தில் கூர்மையாகவும் சமூகத்தையும் அதன் அங்கங்களாகச் செயல்படும் மனிதர்களையும் கண்முன் நிறுத்த முடியுமா?. எவ்வ...

நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிச்சாமி

Image
தங்கள் குடும்ப வரலாறு போல எழுதிய இந்த புத்தகம் சென்ற காலத்தை நமக்கு திரும்பவும் நினைவூட்டுகிறது. சென்ற நூற்றாண்டின் இறுதி வருடங்கள் வரைக்கும் கூட வறுமை தாண்டவமாடியது. விறகு வெட்டுதல், தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் செல்லுதல், சினிமா தவிர எந்த பொழுதுபோக்கும் இல்லாதிருத்தல் என்றே இருந்தது. அப்படி என்றால் 1940-1950 காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் இருந்து மலேயா சென்று உழைத்து வாழ்ந்த தமது குடும்பத்தின் வரலாற்றை இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லியுள்ளார் முத்தம்மாள் அவர்கள்.  முத்தம்மாள் அவர்களிடம் 'பால்ய வயதில் நடந்த எதுவுமே எங்களுக்கு நினைவில் இல்லை. நீங்கள் எப்படி சின்ன வயதில் நடந்தது எல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறீர்கள், இல்லை அது அனைத்தும் கதையா? ' என்று கேட்க, 'எங்கள் காலத்தில் இப்பொழுது உள்ளது போல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. டிவி, போன் என உங்களை உள்ளே இழுத்துக்கொள்ள நிறைய விசயங்கள் இப்பொழுது உண்டு. எங்களுடைய சின்ன வயதில் நடந்ததை நாங்கள் எங்களுக்குள் திரும்பி திர...