Wednesday, May 16, 2018

அன்பே கடவுள்

தல்ஸ்தோயின் சிறுகதை.

கடவுள் ஒரு தேவதை செய்த தவறால், அத்தேவதைக்குச் சாபம் கொடுத்து பூமிக்கு அனுப்பி விடுகிறார். கூடவே, பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து மூன்று கேள்விகளுக்கு விடைகள் கண்டறிந்தால், மீண்டும் தன்னிடம் வந்து சேரலாம் என்கிறார் கடவுள்.

அந்த மூன்று கேள்விகள்;

1. மனிதனிடம் குடிகொண்டிருப்பது எது?
2. மனிதனுக்குக் கொடுக்கப்படாதது எது?
3. மனிதன் எதனால் வாழ்கின்றான்?



தேவதை கண்டுபிடித்த பதில்கள்;

1. அன்பு
2. வரப்போவதை அறியக்கூடிய அறிவு
3. தன்னைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மனிதன் வாழவில்லை; பிறரிடம் அன்பு செலுத்துவதன் மூலமே அவன் வாழ்கிறான்.


அன்பே கடவுள். (Leo Tolstoy)