தேவதாஸ் - ஒரு மனிதனின் வாழ்க்கை
ஆண்கள் தங்கள் முகத்தில் கொஞ்சம் தாடியோடு இருந்தால் 'என்ன தேவதாஸ் மாதிரி தாடியோடு இருக்க?' என்றே நம் மக்கள் விசாரிப்பார்கள். அதனோடு கொஞ்சம் புகைப்பழக்கமும், குடியும் சேர்ந்துவிட்டால் அதுதான் தேவதாஸ். கூடவே காதல் தோல்வியும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு நம் மக்களிடம் பேசப்பட்ட காதல் ஜோடிகள் தேவதாஸ் - பார்வதி. அவர்கள் இருவரின் கைகூடாத காதலைச் சொல்லும் இந்த நாவல் வங்காளத்தில் 1917ல் வெளியாகி, பல மொழிகளில் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. இந்நாவல் பெற்ற செல்வாக்கையும், புகழையும் கண்டு அதனை எழுதிய சரத் சந்திரரே திகைக்கிறார். தமிழில் வெளியான இந்நாவலுக்கு அசோகமித்திரன் முன்னுரை எழுதியுள்ளார். 'தேவதாஸ் - ஒரு சிறிய நாவல். ஆனால் அதில் வாழ்க்கையின் எந்த அம்சம் இல்லை?. நான்கைந்து பாத்திரங்களை மட்டும் உலவவிட்டுப் படைப்பாளி படைத்தது ஒரு விசாலமான, ஒரு நுணுக்கமான புனைகதை. அதே நேரத்தில் அது ஒரு சமூக வரலாறுமாகும். இவ்வளவு எளிதாகவும், அதே நேரத்தில் கூர்மையாகவும் சமூகத்தையும் அதன் அங்கங்களாகச் செயல்படும் மனிதர்களையும் கண்முன் நிறுத்த முடியுமா?. எவ்வ...