Posts

ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம் - தூக்கு செல்வம்

Image
செல்வன் பெற்றோர் வைத்த பெயர், செல்வம் காவல்துறை கொடுத்த பெயர், தூக்கு செல்வம் சிறை அதிகாரிகள் வைத்த புதிய நாமகரணம். 'சிறை குறித்து சமூகம் கொண்டிருக்கும் பார்வைகள் புதிதல்ல. சமூகம் குறித்து சிறையிலிருக்கும் ஒரு கைதி எழுதியிருக்கும் முதல் விரிவான நூல் இதுவே' - என்று இப்புத்தகத்தின் பின்னட்டையில் இருக்கிறது.  தூக்கு செல்வம் அவர்களின் இந்த புத்தகம்,  தண்டனை கைதிகள் என நாம் நினைக்கும் சிறையாளிகள் பற்றியும், சிறைச்சாலைகள் மற்றும்  அங்கே உள்ள அதிகார மையங்கள் என நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 'சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் சிறை வாழ்க்கை அனுபவத்தைப் பதிவு செய்யும் செல்வம் தமிழ்நாடு சிறைகளில் நடைபெறும் பல சங்கதிகளையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.' - என்று தனது இப்புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சந்துரு.  தான் எதற்காக சிறைக்கு வந்தேன் எனத்  தயக்கமில்லாமல்  பின்னோக்கி அனைத்தையும் சொல்லும் செல்வம் சிறைக்கு வந்த பின்னர் கண்ட உலகத்தையும் தெளிவாக நம் முன் வைக்கிறார். அவர் கடந்து வந்த பாதை வலி நிறைந்தது. தினசரிகளில...

மாடித் தோட்டத்தில் - டிராகன் ப்ரூட் 

Image
கோவை தமிழ்நாடு விவசாயப் பல்கலையில் பிப்ரவரி 2025 ல் நடைபெற்ற கண்காட்சியில் டிராகன் பழக் (Dragon Fruit) கன்றை வாங்கி வந்தோம். செம்மண், தென்னை நார் கழிவு மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை கலந்து தொட்டியில்(Grow bag) வைத்த பின்பு மெதுவாக வளர்ந்தது.  இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறு மொட்டுகளாக ஐந்து அல்லது ஆறு பூக்கள் தோன்றியது. அவற்றில் ஒன்று மட்டுமே பெரிதாக வளர, மற்றவை சிறு மொட்டாகவே காய்ந்து உதிர்ந்து விட்டது.  அந்த ஒரு பூ மட்டுமே மலர்ந்து பிஞ்சு விட்டது. கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் கழித்து மேல் தோல் கலர் மாறியவுடன் பறித்து அப்பொழுதே அறுத்தோம். கடைகளில் வாங்கியது போல் கொஞ்சம் சுவை குறைந்த பழமாக அல்லாமல், நல்ல சுவையுடன் இருந்தது. வெள்ளை நிற பழமாக இருந்தாலும் இருக்கலாம் என்று சிலர் சொல்ல, சிவப்பு நிற பழமாகவே இருந்தது மகிழ்ச்சி. இந்த பழத்தை பறிக்கும்போது போன முறை போலவே நிறைய மொட்டுக்கள் விட்டு ஒன்றே ஒன்று மட்டும் பூத்திருக்கிறது. ஏதாவது சத்து இல்லாமையா, என்ன காரணம் என்று தெரியவில்லை.  நிறமிக்க காய்கறிகளான பீட்ரூட், கேரட் போலவே இதிலும்  நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ( Antioxid...

ஆசீர்வாதம் ஸ்டுடியோஸ் - அஜிதன்

Image
இந்தச் சிறுகதை தொகுப்பைப் பற்றி அஜிதன் இப்படிச் சொல்கிறார்: "இருண்மையின் ஆன்மிகம் என இவற்றை வகுக்கலாம். எல்லா தீவிர நிலைகளிலும் குடிகொள்ளும் நம்மை மீறிய ஓர் இருப்பு உண்டு. இக்கதைகள் அதன் மெல்லிய தரிசனத்தை வெவ்வேறு தளங்களில் காட்டிச்செல்பவை."  இந்த எல்லாக் கதைகளிலும் அஜிதன் சொன்னது போல ஒரு தரிசனம் என்பது போல முடிகிறது. அது இழப்பு என ஒரு சிலருக்கு தோன்றினாலும், இன்னொருவருக்கு அதுவே வெற்றியாகவும் சென்றடையக் கூடிய ஒரு இடத்தைக் கண்டறிந்ததின் மகிழ்ச்சியையும் நாம் இந்த கதைகளில் காண முடியும்.  மாரிட்ஜான் உடல்  ஜோக்ஜகார்த்தா நகரத்தின் அருகில் இருக்கும் மெராப்பி எரிமலை இருக்கிறது. இந்த எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்து கிளம்பி சாம்பலை அள்ளி வீசக்கூடியது. இந்த சாம்பல் விவசாய நிலங்களுக்கு உரமாக பயன்பட்டு நல்ல விளைச்சல் கொடுக்கக்கூடியது. இந்த எரிமலைக்கு அருகில் மாரிட்ஜான் என்னும் மக்களின் தலைவர் வசித்து வருகிறார். வயதான அவர், முன்பும் ஒருமுறை எரிமலை வெடித்தபோது சிறிய காயங்களுடன் தப்பிவிட்டவர். இந்த முறை எரிமலை வெடிக்க துவங்குவதை அறிந்து அரசாங்கம் எல்லோரையும் பத்திரமாக மலையை விட்ட...

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்

Image
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் பற்றி அ.கா. பெருமாள் அவர்கள் எழுதிய ஆய்வு நூல் 'ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் (திருவட்டாறு கோவில் வரலாறு)' . ஒரு கோவிலைப் பற்றி என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அவை அனைத்தையும்  மிகச் சிறப்பாக இப்புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். கோவிலின் வழிபாட்டு முறைகள், வரலாறு, சிற்பங்கள், கதைகள், இலக்கியங்களில், ஆழ்வார் பாடல்களில் இக்கோவில் சுட்டிக்காட்டப்பட்ட இடம் மற்றும் வாய்மொழிக் கதைகள் என ஒன்று விடாமல் எழுதியுள்ளார் ஆசிரியர்.  ஒரு கோவில் என்பது சாதாரண இடம் அல்ல. பல நூற்றாண்டுகள் முன்பே கட்டப்பட்டு, சில மாற்றங்கள் காலப்போக்கில் உருவாகி இன்று நம்முன் வலிமை குன்றாமல் நிற்கிறது. "ஒரு ஆலயத்தின் சிறப்பிற்கு பத்து விசேஷக் குணங்கள் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.  அந்த ஆலயம் பழமையானதாய், பாரம்பரிம் உடையதாய் இருத்தல்;  கோவிலுடன் தொடர்புடையதாக ஓலை ஆவணங்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள் கிடைத்தல்;  கோவிலுக்கும் வட்டார வரலாற்றுக்கும் மிகுந்த தொடர்பு இருத்தல்; புராணங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருத்தல், தலபுராணங்கள் இருத்தல்;  கோவிலில...

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

Image
பல்லவர் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோவில்களில் ஒன்று காஞ்சி கைலாசநாதர் கோவில். ஒவ்வொரு இடத்திலும் கலைநயம், காலங்களைத் தாண்டி நிற்கிறது. சில சிற்பங்கள் மணல் கற்களால் செதுக்கப்பட்டதால் காலப்போக்கி ல் தனது பொலிவை இழந்திருக்கிறது. உறுதியான கற்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் காலங்கள் தாண்டியும் நமக்கு காட்சியளிக்கிறது.  நாங்கள் சென்றபோது அளவான கூட்டமே இருந்தது. காஞ்சியில் உள்ள பிரபலமான கோவில்களில் உள்ள கூட்டம் போல் இங்கே இல்லை. குறைவான மக்கள் வந்து போவதும் இந்த பழைய கோவிலுக்கு நல்லது தான்.  காணும் இடமெல்லாம் கலை நயத்தை காட்சிக்கு வைத்திருக்கும் அற்புதமான கோவில் கைலாசநாதர் கோவில்.  நாம் பார்க்கும் இடமெல்லாம் சிம்ம தூண்கள் அழகுடன் இருக்கிறது.  இந்தக் கோவிலுக்கு பின்னர் பெரிதாக எடுக்கப்பட்ட பல ஆலயங்களுக்கு இந்த ஆலயம் முன்னோடியாக இருந்திருக்கிறது. முக்கியமாக தஞ்சாவூர் பெரிய கோவிலைச் சொல்லலாம். முன்பு பல சிற்பங்கள் பழுது பார்க்கப்பட்டதில் அரைகுறையாகத் தெரிவது கவலையை ஏற்படுத்துகிறது. இந்தக் கோவிலில்  ஓவியங்கள் முன்பு இருந்திருக்கிறது. இப்போது சில கோடுகளும் அங்கங...

கேரள முரல் ஓவியங்கள்

Image
மிகச் சில வண்ணங்களைக் கொண்டு அழகாக வரையப்பட்டவை கேரள முரல் ஓவியங்கள். அந்தக் காலத்தில்  இயற்கையான பொருட்களில் இருந்தே இந்த வண்ணங்கள் பெறப்பட்டன. உதாரணத்துக்கு வெண்மை நிறத்துக்கு சுண்ணாம்பும், கருமை நிறத்துக்கு நல்லெண்ணெய் விளக்கு தீபத்தின் மேல் கவியும் கருமையான மையையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  கோவில்களிலும், அரண்மனைச் சுவர்களிலும் இந்த வகை ஓவியங்களை கேரளாவில் நாம் இப்போதும் காணலாம். சில இடங்களில் உள்ள ஓவியங்கள் காலத்தை தாண்டியும் நமக்கு காட்சியளிக்கிறது. இப்பொழுது இந்த வகை ஓவியங்கள் துணிகளிலும் வரையப்படுகின்றன. எனக்கு இந்த வகை ஓவியங்களின் அழகு பிடித்துப்போக, ஓவியம் வரையத் தெரியாத எனக்கு வரைந்து பார்த்தால் என்னவென்று தோன்றியது. நான் வரைந்த இந்த இரண்டு ஓவியங்களுமே கேரளாவின் பள்ளிமன் னா மகாதேவர்  கோவிலில் உள்ளது. முகம், கை வளைவுகள் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பல முறை முயன்று வரைந்தேன். பார்த்து வரைந்தாலும் மூலத்துக்கும் இதற்கும் வண்ணங்களின் கலவை, வளைவுகளின் நேர்த்தி ஒன்றல்ல. அக்ரிலிக் வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளேன். ஆலமர் செல்வன் / தட்சிணாமூர்த்தி  Acrylic on canv...

சகீனாவின் முத்தம் - முத்தம் பெறுவது எளிதா ?

Image
விவேக் ஷான்பாக் எழுதிய நாவலான காச்சர் கோச்சர் போன்றே ஒரு சிறு குடும்பத்தைப் பற்றிய கதை சகீனாவின் முத்தம். கதை சொல்லும் முறையில் சுற்றியிருக்கும் அனைவரின் அன்றாடத்தையும், கடந்த காலத்தையும் நேர்த்தியாக சொல்லிச் சொல்கிறார் விவேக் ஷான்பாக். தலைப்புக்கும் நாவலில் இருக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பது போலத் தோன்றலாம். ஆனால் கதையின் முக்கிய திருப்பமே இந்த தலைப்புதான்.  வெங்கி எனப்படும் வெங்கடரமணன், மனைவி விஜி மற்றும் அவர்களின் ஒரே மகளான ரேகா. இவர்களின் வாழ்க்கையில் நான்கைந்து  நாட்கள் கதைதான் இந்நாவல் என்றாலும், வெங்கட்டின் நினைவுகள் மூலம் பழைய கதை சொல்லப்படுகிறது. வெங்கட்டும் விஜியும் கணிணித்   துறையில் வேலை செய்பவர்கள். அவர்களின் மக்கள் ரேகா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி. ரேகா ஒருநாள் வெங்கட்டின் சொந்த ஊருக்குச் சென்ற வேளையில், இங்கே அவளைத் தேடி அவளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து போகிறார்கள். அவளுடைய செல்போனுக்கு கூப்பிட்டால் போன் போகவில்லை என்று சொல்கிறார்கள்.  'அவள் இங்கே இல்லை. எந்த தொலைபேசித் தொடர்பும் எங்கள் ஊரில் இல்லை. அவளாக கூப்ப...