Posts

சினிமா

எங்கள் வாழ்க்கையில் வராத வில்லன்களை காட்டினீர்கள் நாங்கள் பார்க்காத குறையுடை காதலிகளுடன் கொஞ்சி மகிழ்ந்தீர் கனவில் கூட பார்க்காத தூர தேசங்களில் பாடி ஆடினீர் பறந்து பறந்து பகைவரை அடித்தீர் எதை வைத்து நீங்கள் நடிக்கும் தயாரிக்கும் சினிமாக்கள் தான் எம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமென விளம்பரம் தருகுரீர் ?

ரோஸ்

"ஏய்... ரோஸ்.. ரோஸ்.. ச்ச்ச்ச்சு.... " என்றால் எங்கிருந்தாலும் ஓடி வரும். வளர்த்தது பக்கத்து வீட்டு ஆயாதான் என்றாலும் எங்கள் வீட்டுக்கு வெளியில் போட்டிருக்கும் சாக்கில்தான் எப்போதும் படுத்திருக்கும். "யார் ஊட்டுச் சோத்த தின்னுட்டு.. யார் ஊட்ல படுத்திருக்க ..... ? " எனக் கேட்டவாறே அந்த ஆயா எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம், கிழவியை திரும்பி பார்த்துவிட்டு திரும்பவும் தலையை சாக்கில் சாய்த்துக் கொள்ளும். வெள்ளை கலரில், அங்கங்கே பழுப்பு நிறத்தில் ஒல்லியாக இருக்கும். குரைப்பதை தவிர, யாரையும் கடித்ததில்லை. யாராவது வீட்டுக்கு வந்தால் வாசலிலேயே நின்று விடுவார்கள். "ஏங்க, இந்த நாயி கடிக்குமா? " எனக் கேட்பார்கள். " ஒன்னும் பண்ணாது.. வாங்க.. " என்று சொன்னாலும் பயந்து கொண்டேதான் வருவார்கள். ஒரு காவல் ஆள் போலவே இருந்தது ரோஸ். ஆண் நாய்க்கு எதற்கு, "ரோஸ்" அப்படின்னு பேரு வெச்சிங்க என்று அந்த ஆயாவிடம் கேட்டால் "அதெங்க.. நானா வெச்சேன்... பேரனுக வெச்சாங்க.... அப்படியே கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.. " என்றது. ரொம்ப சாதுவாக இருக்கும். எந்நேரமும் ...

சாக்கடை

நிலவில் நீர் இருக்கலாம் என அறிய ஒரு செயற்கைக்கோள் ! கண்டம் விட்டு கண்டம் பாயும் கணைகள் ! எத்தனையோ வசதிகள் அறிவியலால் கண்டோம் ! எப்போது தூக்கி விட போகிறோம் சாக்கடையில் இறங்கி முழங் கால் சேற்றில் பதிய சுத்தம் செய்யும் மக்களை.. கைக்குட்டை பொத்தி எட்டி நடை போட்டு மூக்கோடு வாசனையை மறைக்க நினைக்கும் நமக்கு அறிவியல் ஒரு வரம்தான் !

குற்றமும் தண்டனையும் (Crime and Punishment)

ஒரு குற்றத்தை செய்து விட்டு அதற்க்கான தண்டனையை அனுபவிக்க ஒரு மனசு வேண்டும். அல்லது தான் செய்த குற்றம் சரியே என நினைத்து கொண்டிருப்பது. தன்னுடைய நோக்கில், தான் செய்த கொலை அல்லது திருட்டு போன்றவற்றை சந்தர்ப்ப வசத்தால் நேர்ந்தது என்றும் கூட சொல்லலாம். ஊருக்கு தப்பாக தெரியும் ஒரு குற்றம், குற்றம் செய்தவனின் மனசில் நல்லதாக படலாம். ஒரு மாணவன், ஏதோ ஒரு நோக்கத்தில் ஒரு கொலையை செய்து விட்டு ஊரில் நடமாடி கொண்டு இருந்தால் எப்படி இருக்கும். அதுவும் அந்த கொலையை பற்றி துப்பு துலக்கும் நபர்களிடம் இவன் நட்பை வளர்த்து கொண்டு, அவர்களிடமே அந்த கொலையை பற்றி பேசி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?. அவனுடைய மனசாட்சி அவனை விடுவதில்லை. அவன் அவற்றை எதிர் கொள்ள தயார் ஆகின்றான். அப்படியும் ஒரு நப்பாசை, தப்பிக்கலாமா அல்லது கடைசி வரை மோதி பார்க்கலாமா என்று. கடைசியில் அவன் தன் தங்கையிடம் சொல்கிறான். "குற்றமா ? எது குற்றம் ?, அந்த கிழவியினால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. மிகவும் கேவலமான பிறவி அவள். அவளை கொன்றது, நாற்பது பாவங்களுக்கு மன்னிப்பை தேடி கொண்டதுக்கு சமம்." "அண்ணா என்ன சொல்லி கொண்டி...

தலைவர்கள் வருகிறார்கள்.....

தேர்தலுக்கும் இடை தேர்தலுக்கும் வெள்ளம் வந்தாலும் தீ வைத்து கொண்டாலும் கட்சியினர் இல்ல திருமணத்திற்கும் உதவிகள் வழங்கவும் கடைகள் திறப்பிற்கும் எங்கள் தலைவர்கள் அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள் நோயுற்றிருக்கும் நோயாளியை பார்க்க வருவது போலவும் மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !

கட்சிகள்

அடர் கருமை நிறத்தில் சாக்கடை அதன் ஓரத்தில்தான் எம் மக்களின் இல்லங்கள் எம் குழந்தைகள் அள்ளி விளையாடுவதும் குளித்து மகிழ்வதும் அங்கேதான் எல்லா சமையத்திலும் கழிப்பதும் அங்குதான் அங்கேயும் எம்மை காக்க வந்த ரட்சகர்களான கட்சிகளின் கொடிகள் மட்டும் அழுக்கில்லாமல் உயரத்திலேயே பறக்கின்றன !

பெயர்

நான் எழுதிய எல்லா கவிதைகளுக்கும் பெயரிட்டு விட்டேன் உன்னைத் தவிர !