நான்கு இட்டலிகள்

உலகத்துக் கவலைகளில்
மூழ்கியிருந்தேன் நான்.
நான்கு இட்டலிகளை
வட்டிலில் வைத்து
'தின்று இளைப்பாற்றுங்கள்
நன்கு செரிக்கும்'
என்கிறாள் அரசி.
செரிப்பது மனமா, வயிறா
எனக் குழம்புகிற
அரசனாய் நான்.

Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்