குறும்படம்: ஆந்தை பாலத்தில்.. (An Occurrence at Owl Creek Bridge)
(மெல்லிய இதயம் கொண்டவர்கள் இந்தப் படத்தை பார்ப்பதைத் தவிர்க்கவும்.)
ஒரு ஆற்றின் மீது ஆந்தைப் பாலம் அமைந்து இருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தூக்கில் போடுவதற்காக, ஆந்தைப் பாலத்தின் மீது அவனைக் கொண்டு செல்கிறார்கள். எல்லோரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். தூக்கு கயிறு இறுக்கப்படுகிறது. அப்பொழுது, தூக்கு கயிறு அறுந்து, குற்றவாளி ஆற்றில் விழுந்து விடுகிறான்.
கயிற்றில் இருந்து தப்பிய அவன், ஆற்றில் நீந்த ஆரம்பிக்கிறான். உடனே, சுற்றி இருக்கும் காவலர்கள் துப்பாக்கியால் அவனைச் சுடுகிறார்கள். கரையில் இருந்து அவனைச் சுட்டுக் கொண்டே துரத்துகிறார்கள். அவன் நீந்திக் கொண்டே இருக்கிறான்.
ஒரு சமவெளியை அடைந்து, காடு தோட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறான்.
இறுதியில், ஒரு வீட்டில் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள். அவனின் மனைவியாகவோ அல்லது காதலியாகவோ இருக்கலாம். தூரத்தில் அவன் ஓடி வருவதைப் பார்த்து, அவளும் அவனை நோக்கி வருகிறாள். அவன், தனது இரு கைகளையும் அவளை நோக்கி அணைக்க ஓடி வருகிறான். பக்கத்தில் வந்ததும், அவளின் முகத்தை தன் இருகைகளால் ஏந்துகிறான்.
அதே சமயம், அவனை அந்தத் தூக்கு கயிறு இறுக்குகிறது. ஆம், அவன் தூக்கில் இருந்து தப்பிக்கவும் இல்லை. ஓடிப் போகவும் இல்லை.
ஒரு கண நேரத்தில் அவன் கண்ட கனவாக இருக்கலாம் அல்லது அவன் தப்பிக்க நேர்ந்து இருந்தால் இப்படிக் கூட நடந்து இருக்கலாம்.
கனவுக்கும், நிகழ்வுக்கும் இடையில் தானே நாம் வாழ்ந்து வருகிறோம். நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று.
மனதை கவ்விய (பாதித்த ) அருமையான படம் .. பகிர்வுக்கு நன்றி
ReplyDelete//கனவுக்கும், நிகழ்வுக்கும் இடையில் தானே நாம் வாழ்ந்து வருகிறோம். // மிகச்சரி ...!
ReplyDeleteகுறும்படங்கள், உலகப்படங்கள் மீதான ஆர்வத்தை என் நண்பர்கள் சிலர் துவக்கி வைத்திருக்கிறார்கள் அந்த வரிசையில் நீங்களும் வருவதை மகிழ்ந்து ரசிக்கிறேன். நன்றி ஜி. :)
ReplyDeleteமுகநூல் கணக்கினை முடித்துக் கொண்டேன். எனவே குறும்படத்தை tamilspeak.com -இணையத்திற்கும், மேலும் இரு வலைப்பூக்களுக்கும் கொண்டு செல்ல இயலவில்லை. ஞாயிறன்று நேரில் சந்திக்கலாம்.
ReplyDeleteஇறுதி காட்சி டைரக்டரின் திறமைக்கு ஒரு சான்று. அருமை...அருமை
ReplyDeleteநன்றி நண்பர்களே..
ReplyDelete