Popular posts from this blog
சிறு துளிகள் (23/11/2010)
பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...
வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை
பள்ளியில் 'செவ்வாழை' கதை பாடமாக இருந்தது. ஓர் ஏழையின் வீட்டில் வளரும் செவ்வாழை குலை தள்ளி இருக்கும். அவனின் குழந்தைகள், மனைவி என அந்தக் குலை பெரிதாகி எப்பொழுது பழம் பழுக்கும், நாம் தின்னலாம் எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர், தன் வீட்டு விசேசத்துக்கு, அந்த வாழையை வெட்டிக் கொடுக்கச் சொல்ல, வேறு வழியில்லாமல் வெட்டித் தந்து விடுகிறான் அந்த ஏழை. குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து அழுவார்கள். அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி. ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது. குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்...





அழகிய படங்கள் தம்பி இளங்கோ... 90களில் நான்கு வருடம் பைகாராவில் தான் பணிபுரிந்தேன்... பைகாரா அருவி ஒரு காலத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் இருக்கும் ..பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஇந்த Falls-ல் குளிக்க முடியாது இல்ல? ஊட்டி எனக்கு ரொம்ப பிடிச்ச பல முறை சென்ற ஊர் !
ReplyDelete@பத்மநாபன்
ReplyDeleteஒருநாள், இரண்டு நாள் போய் வந்ததற்கே அந்த இடங்களை இன்னும் மறக்க முடியவில்லை. நீங்கள் நான்கு வருடம் அங்கே கண் குளிரப் பர்ர்த்து இருக்கிறீர்கள். மனிதன் இன்னும் மிச்சம் வைத்திருக்கிற சில இடங்கள் இருக்கிறது இல்லையா?
நன்றிகள் அண்ணா..
@மோகன் குமார்
ReplyDelete"இங்க குளிக்க கூடாது" அப்படின்னு எழுதி வெச்சிருந்தாங்க. அப்படியும் ஒரு சிலர் ஓரமா குளிச்சுட்டுத்தான் இருந்தாங்க. கொஞ்சம் ஏமாந்தால் வழுக்கி விடக் கூடிய இடங்கள் அதிகமாக இருக்கும்.
நன்றிங்க.
குளிக்க முடியாததற்கு காரணம் ஒன்று கடும் குளிர் இரண்டு நீங்கள் சொன்ன பாறைகள்... குளிக்கவிடாமல் இருப்பது நல்லது. கொடுமை அவ்வளவு உயரத்திலும் இரசாயன கழிவுகளை கலந்து விடுகிறார்கள்... அந்த கொடுமை ஓய்ந்திருக்கும் என நம்புகிறேன்...
ReplyDelete@பத்மநாபன்
ReplyDeleteநீங்கள் சொன்னது உண்மை, நான் குளிரை மறந்து விட்டேன் :)
இருக்கும் கொஞ்ச நஞ்சம் இயற்கையையும் அழித்துவிட்டு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியவில்லை.
நன்றி