புகை புகையாக

தூயோன் புத்தகத்தில், கோபிகிருஷ்ணன்...


முயற்சி.. திருவினை


பதினேழு ஆண்டுகள்
முழு மூச்சாக
ஊதித் தள்ளியதில்
உனக்கு நுரையீரல்களில்
அரிப்பு நோய் கண்டிருக்கிறது என்று
வருத்தத்துடன் அவர் சொன்னபோது
இவ்வளவு நாள் பட்ட கஷ்டம்
வீண்போகவில்லை என்றானதில்
ஒரு ஆத்மீக ஆனந்தம்.

**************************************

திருப்தி

புகை புகையாகப்
புகைத்ததில்
ஒரு நுரையீரலை இனி
ஒன்றும் செய்வதற்கில்லை என்று
அவர் சொன்னபோது
ஒரு வேஷ்டி இருக்கும்போது
இன்னொன்றுக்கு ஆசைப்படுவது
ஆடம்பரம் என்று சொன்ன
மகாத்மாவின் நினைவு வந்து
ஆனந்திக்கச் செய்தது.



Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை