ஒரு படம்

ஒரு படம் ஓராயிரம் செய்தி சொல்லும் என்பார்கள். எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் இப்போதைய நிலை இது.




எல்லோரும் நகரங்களை நோக்கிப் பயணிக்க, கடைசிக் காலத்தில் ஒற்றையாய் இருந்த கிழவியும் போய்சேர, மிச்சம் மீதி இருந்த ஓடுகளையும் சட்டங்களையும் விலை பேசி விட்டுப் பிரித்து விட்டனர். இன்னும் சில வருடங்களில் மொத்தமாக சாய்ந்து விடும் அல்லது இப்பொழுது சாய்ந்திருக்க கூடும்.

அதன் பின்னர் அங்கே மழைக்காலத்தில் புற்களும் செடிகளும் வளரக் கூடும். புதராகவும் மாறலாம். பதேர் பாஞ்சாலி இறுதிக் காட்சியில் வருவதைப் போல அங்கே பாம்புகளும் வசிக்க கூடும்.

Comments

  1. மனதை கனக்க வைக்கும் படம்... எத்தனை நினைவுகளை சுமந்த இடமாக இருந்து இருக்கும்! ம்ம்ம்ம்.....

    ReplyDelete
  2. குட்டிச் சுவற்றின் நிலைமையை பார்த்தாலே தெரிகிறது இளங்கோ!!

    ReplyDelete
  3. பழசுக்கு எப்போதும் நேரும் கதி தான் இந்த குடிசைக்கும்..

    ReplyDelete
  4. @மோகன் குமார்
    வருத்தத்தை பதிவு செய்ததற்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  5. @Chitra
    ஆமாங்க, நினைவுகள் தாங்கி கிடக்கும் இடம் இது.
    நன்றிகள்

    ReplyDelete
  6. @RVS
    குட்டிச் சுவராய் இருந்தாலும் கொஞ்சம் பேருக்கு பாதுகாப்பளித்த இடம், இப்பொழுது இப்படி.
    நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  7. @சாமக்கோடங்கி
    நன்றிங்க பிரகாஷ்.
    பழையவை என்றாலே நாம் ஒதுக்கித் தள்ளி விடுகிறோம் இல்லியா ?

    ReplyDelete
  8. மனதை சுத்தியலால்.... ஓங்கி அடிக்கிறது.

    ReplyDelete
  9. @சி.கருணாகரசு
    படத்தின் வலியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை