இத்தனைகிடையிலும் ...

போரினால் கொத்து கொத்தாய்
கொல்லப்பட்ட மனிதர்கள்
வன்முறைகள்
அரசியல்வாதியின் மாறாத
தந்திர பேச்சுக்கள்
போலிகளாக மாறிப்போன
காவிக் கறைகள்
ஊர்ப் பணத்தை கொள்ளையடிக்கும்
பெரிய தலைகள்
வியாபாரமான
கல்விக் கூடங்கள்
இத்தனை
நிகழ்வுகளுக்கிடையிலும்
நேற்றிரவு
மழை பெய்தது
பக்கத்து வீட்டில்
பெண் குழந்தை
பிறந்திருக்கிறது !

Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை