Wednesday, March 7, 2012

சமூக வலை













மனதில் தோன்றுவதையும்
எடுத்த புகைப்படங்களையும்
சட்டென்று சமூக
வலைத் தளங்களில்
பகிர்ந்து கொள்ளத் துடிக்கும்
மகனைப்  பார்த்து,

"ஏன், எங்களிடம் நீ
ஒன்றையும் சொல்வதில்லை"
எனக் கேட்கும் தாயிடம்..

"நீயும் பேஸ்புக்ல
லாகின் பண்ணும்மா"
எனச் சொல்கிறான் மகன்.


(படம்: இணையத்தில் இருந்து - நன்றி) 

No comments:

Post a Comment