Tuesday, November 1, 2011

அரசுப் பள்ளிகளில் ஓர் ஆச்சரியப் பள்ளி

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, ராமம்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு. பிராங்க்ளின் என்பவர் பற்றி புதிய தலைமுறை வார இதழ், ஈரோடு கதிர் அவர்களின் வலைத் தளம் மற்றும் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு என பல முறை அந்தப் பள்ளியை பற்றி அறிந்திருந்தாலும் இன்னும் நேரில் செல்ல முடியவில்லை.



போன சனிக்கிழமை அன்று, சாமக்கோடாங்கி பிரகாஷ் தான் அங்கு செல்லவிருப்பதால், 'வருகிறீர்களா' என்று கேட்டார். என்னால் அன்றும் செல்ல இயலவில்லை. நண்பன் கமலக்கண்ணன் செல்வதாக கூறினான். நண்பர்கள் அங்கு சென்று வந்ததை பிரகாஷ் தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஒரு அரசாங்கம் செய்ய முடியாத ஒரு செயலை, அந்த ஊர் மக்களும் அந்த ஆசிரியரும் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை
இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள்

எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு
நல்லார் ஒருவர்

பள்ளியின் வலைத்தளம்
இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி




1 comment: